மும்பை: மும்பை நாக்பூர் மற்றும் யவத்மாலில் புதிய வழக்குகள் கண்டறியப்பட்ட பின்னர், மகாராஷ்டிராவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வழக்குகள் எண்ணிக்கை சனிக்கிழமையோடு 26 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் அம்மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப், சனிக்கிழமையன்று மாநிலம் முழுவதும் உள்ள மால்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
எனினும் மக்களின் அடிப்படை தேவையான மளிகை பொருட்களினை விற்கும் அடிப்படை மளிகை கடைகள் திறந்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மால்கள் மற்றும் பலவற்றை மூட உத்தரவு
இந்த நிலையில் பள்ளிகள், கல்லூரிகள், நகராட்சிகள், பஞ்சாயத்துக்கள் உள்பட அனைத்தும் மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் தற்போது முதல் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்புகள் வரையில் தேர்வுகள் நடத்தப்பட்டால், அவற்றை தள்ளிவைக்கும் படியும், அட்டவணைப்படி 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு மட்டும் தேர்வுகளை நடத்தவும் தோப் கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் திரும்பியவர்
மும்பையில் கடந்த சனிக்கிழமையன்று நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் கஸ்தூர்பா மருத்துவமனையில் அனுமதிக்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல் நிலை சீராக உள்ளது என்றும் பிஎம்சி இயக்குனர் சுகாதார தஷா ஷா தெரிவித்துள்ளார். முன்னதாக சமீபத்தில் துபாயில் இருந்து திரும்பிய இருவருக்கே கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
பலருக்கு பாதிப்பு
இதுவரையில் இம்மாநிலத்தில் புனேவில் 10 பேரும், மும்பையில் எட்டு பேரும், நாக்பூரில் 4 பேரும்., யவத்மாலில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தானே மற்றும் அகமது நகரில் தலா ஒருவருக்கும் கொரோனா தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை விசாரித்த போது அமெரிக்கா, துபாய் பிரான்ஸ், பிலிப்பைன்ஸ் மற்றும் கத்தாரிலிருந்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
பீதியடைய வேண்டாம்
எனினும் மக்கள் இது குறித்து யாரும் பீதியடைய வேண்டாம். ஏனெனில் நீங்கள் ஒரு வேளை வெளி நாட்டிலிருந்து திரும்பியிருந்தால், உடனடியாக மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மேலும் எந்த அறிகுறியும் இல்லையென்றாலும் கூட 14 நாட்கள் தனிமையில் இருங்கள் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
திரையரங்குகளும் மூடல்
இதே போல கொரோனா வைரசை தொற்றுநோய் என்று உத்தரகாண்ட் அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் உத்தரகாண்டில் அனைத்து திரையரங்குகள் மற்றும் கல்லூரிகள் வருகிற 31ந்தேதி வரை மூடப்படுவதாகவும் அறிவித்துள்ளது. எனினும், மருத்துவ கல்லூரிகள் தொடர்ந்து திறந்திருக்கும் என உத்தரகாண்ட் மந்திரி மதன் கவுசிக் அறிவித்துள்ளார்.
More From GoodReturns

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications