900 பேருக்கு மேல் பலி கொண்ட கொடூர வைரஸ்.. கொரோனா இறக்குமதியில் இந்தியாவுக்கு 17-வது இடம்..!

டெல்லி: உலகினையே ஆட்டிப்படைத்து வரும் சீனாவில் பலிஎண்ணிக்கை 902ஐ தொட்டுள்ளது. இதில் கொடுமை என்னவெனில் சுமார் 40,000 பேருக்கு மேல் இந்த கொடிய கொடூரமான வைரஸால் தாக்கப்பட்டுள்ளனராம்.

மிக வேகமாக பரவி வரும் இந்த கொடூர வைரஸ், சீனாவில் மட்டும் அல்லாது மற்ற உலக நாடுகளிலும் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

சொல்லப்போனால் ஞாயிற்றுகிழமையன்று மட்டும் கொரோனா வைரஸ் 100 பேருக்கு மேல் காவு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதே போல் நாளுக்கு நாள் தாக்குதலும் அதிகரித்து கொண்டே போகிறது.

இந்தியாவுக்கு 17வது இடம்

இந்தியாவுக்கு 17வது இடம்

சீனாவின் வுகான் மாநகரில் டிசம்பர் 2019ல் முதன் முதலாக தோன்றி இன்று உலகையே என்ன சேதி என்று கேட்டு வரும் கொரோனாவின் தாக்குதலுக்கு மத்தியில், கொரோனாவை இறக்குமதி செய்வதில் இந்தியாவுக்கு 17வது இடம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மூன்று பேரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்திராகாந்தி விமான நிலையம்

இந்திராகாந்தி விமான நிலையம்

மேலும் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் மிக ஆபத்தில் உள்ள இடமாக உள்ளதாம். இதை தொடர்ந்து மும்பை, கொல்கத்தா, பெங்களுரு, சென்னை, ஹைதராபாத் மற்றும் கொச்சின் விமான நிலையங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விமானத்தில் பயணிக்கும் கொரோனா வைரஸ்

விமானத்தில் பயணிக்கும் கொரோனா வைரஸ்

சர்வதேச அளவில் சாவகாசமாக பயணித்து வரும் கொரோனா வைரஸ், விமான பயணத்தினால் தான் ஆதிக்கம் செலுத்துவதாக ஆய்வில் கூறப்படுகிறது. 11 மில்லியன் குடியிருப்பாளர்களைக் கொண்ட சீனாவின் மிகப்பெரிய ஏழாவது நகரமான வுஹான் தனிமைப்படுத்தப்படுவதற்கு முன்னரே, பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை இணைக்கும் வுகான் விமான நிலையமாக இருந்தது.

விமான நிலையம் மூடல்

விமான நிலையம் மூடல்

இதனாலேயே கொரோனா வைரஸ் மற்ற உலக நாடுகளுக்கும் பரவ இது வழி வகுத்தது. இதன் பின்னரே பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை இணைக்கும் வுகான் விமான நிலையம் மூடப்பட்டது. எனினும் அதற்கு முன்பே கொரோனாவானது படையெடுத்து விட்டது. அந்த விமான தளத்தில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தே, இந்த தொற்றுதலும் அதிகரித்துள்ளது.

ஆபத்தில் முதல் 10 நாடுகள்

ஆபத்தில் முதல் 10 நாடுகள்

இப்படி தொற்றுதல் வாங்கிய நாடுகளில் இறக்குமதி செய்யும் அபாயத்தில் உள்ள முதல் 10 நாடுகள், பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தைவான், அமெரிக்கா, வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர், மற்றும் கம்பேடியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இதில் சந்தோசப்படக் கூடிய விஷயம் என்னவெனில் இந்தியா இந்த முதல் 10 லிஸ்டில் இல்லை என்பது கவனிக்கதக்கது.

சீனாவுக்கு பாதிப்பு அதிகம்

சீனாவுக்கு பாதிப்பு அதிகம்

தாய்லாந்திற்கு தேசிய இறக்குமதி ஆபத்து 2.1% ஆக இருந்தாலும், இது இந்தியாவுக்கு 0.2% ஆக இருக்கும். இந்த கொரோனா வைரஸானது 2003ல் தாக்கப்பட்ட சார்ஸ் வைரசை விட மிக கொடூரமானது. சுமார் 20 நாடுகள் வழக்குகளை உறுதிப்படுத்தியிருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களில் 99% பேர் சீனாவில் உள்ளனர்.

பொருளாதாரத்தில் பாதிப்பு

பொருளாதாரத்தில் பாதிப்பு

சீனாவில் இருந்து மிக வேகமாக பரவி வரும் கொரோனாவின் தாக்கத்தினால் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இது பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. சொல்லப்போனால் சர்வதேச பொருளாதாரத்திலும் இதன் எதிரொலி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+