புதிய ரூபாய் நோட்டுகளில் பல முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது, இதனால் போலி ரூபாய் நோட்டுகள் உருவாக்குவது என்பது கடினமான ஒன்றாக இருந்தாலும் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான FARZI மூலம் கள்ள நோட்டுகள் எப்படியெல்லாம் தயாரிக்கப்படுகிறது, அதை அரசு அமைப்புகள் எப்படியெல்லாம் தடுக்கிறது என்பதை விறுவிறுப்பான காட்சி அமைப்பில் வெளியானது.
இந்த நிலையில் இந்தியாவிலும் சூப்பர் நோட் எனப்படும் அசலுக்கும், போலிக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு இருக்கும் கள்ள நோட்டு புழக்கத்தில் உள்ளதா என்ற அச்சம் அதிகரித்தது. ஒருவேளை உங்கள் கையில் கள்ள நோட்டு பெற்றால் என்ன செய்ய வேண்டும்..?

ஏடிஎம்மில் கள்ள நோட்டைப் பெற்றால், அந்த நோட்டின் முன் மற்றும் பின்புறம் இரண்டையும் சிசிடிவி கேமராவில் காட்டி, ஏடிஎம்மில் உள்ள பாதுகாவலரிடம் தெரிவிக்கவும். மறக்காமல் உங்கள் ஏடிஎம் பரிவர்த்தனையின் ரசீதை ஏடிஎம் இயந்திரத்தில் எடுத்துக் கொண்டு பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
போலி நோட்டு மற்றும் பரிவர்த்தனை ரசீதை வங்கியில் கொடுக்க வேண்டும், பின்பு வங்கி அதிகாரிகள் ஒரு படிவத்தை நிரப்ப அறிவுறுத்துவார்கள். இந்த படிவத்தின் அடிப்படையில் தான் போலி நோட்டுக்குப் பதிலாக அசல் நோட்டைக் பெற முடியும். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, ஏடிஎம்மில் இருந்து போலி நோட்டுகள் வந்தால் வங்கிகள் வாடிக்கையாளருக்கு பணத்தைத் திருப்பித் தர வேண்டும்.
இதுவே தனிப்பட்ட பரிவர்த்தனையின் போது நீங்கள் போலி ரூபாய் நோட்டைப் பெற்றால், நீங்கள் ஏமாற்றப்பட்டு உள்ளீர்கள் எனில் சம்பந்தப்பட்டவர் கண்முன்னே இருந்தால் உடனே அவரிடம் மாற்றிக்கொள்ளுங்கள். உறுதியான ஆதாரம் இல்லாமல் இதில் எதுவும் செய்ய முடியாது.
இருப்பினும், நீங்கள் பல போலி நோட்டுகளைப் பெற்றால், அதை மறைக்கவோ அல்லது மறைக்கவோ முயற்சிப்பதை விட, ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் அல்லது உங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தெரிவிப்பது நல்லது.

ஏனென்றால், போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டவர்களை கண்டுபிடிக்க நீங்கள் கொடுக்கும் புகார் உதவியாக இருக்கும். மேலும் IPC பிரிவு 489 C-ன் கீழ் போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவது தண்டனைக்குரியது. குற்றம் செய்தவர்களுக்கு ஏழு ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications