இந்தியாவைப் புரட்டிப்போட்டு வரும் கொரோனா தொற்றின் 2வது அலையில் பல உயிர்களை இழந்த வரும் மோசமான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு இருக்கும். ஆனால் சர்வதேச நாணய நிதியம் இந்தியா இன்னும் மோசமான நிலையை அடைவதற்கான சாத்தியக்கூர்கள் அதிகமாக இருப்பதாக எச்சரித்துள்ளது.
இதேபோல் இந்தியாவில் ஏற்பட்டு இருக்கும் இந்தப் பாதிப்பு இதுநாள் வரையில் கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து தப்பித்து வந்த பல குறைந்த மற்றும் நடுத்தரப் பொருளாதார நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
ஐஎம்எப் அமைப்பு
ஐஎம்எப் அமைப்பின் பொருளாதார வல்லுனர் ருசிர் அகர்வால் மற்றும் தலைமை பொருளாதார வல்லுனர் கீதா கோபிநாத் ஆகிய வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 2021ஆம் ஆண்டின் முடிவிலும் இந்தியாவில் 30 சதவீத மக்கள் மட்டுமே வேக்சின் பெறக்கூடும் கணித்துள்ளது.
இந்தியாவில் மோசமான நிலை
பிரேசில் நாட்டின் ஏற்பட்ட மோசமான நிலைக்குப் பின்பு இந்தியாவின் 2வது கொரோனா அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக இந்தியா இன்னும் மோசமான நிலையை எதிர்கொள்ளவும் அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. ஐஎம்எப் கிட்டதட்ட Winter is coming என்பதுபோல் எச்சரித்துள்ளது.
கொரோனா 2வது அலை
இந்தியாவில் கொரோனா முதல் அலையை இந்திய மருத்துவத் துறை மிகவும் சிறப்பான முறையில் கையாண்டு வெற்றிபெற்ற நிலையில், 2வது அலையில் மக்களுக்குப் போதிய மருத்துச் சிகிச்சை அளிப்பதற்கான தளமும், ஆக்சிஜன், மருத்துவமனை படுக்கை எனப் பலவற்றுக்கும் அதிகளவிலான பற்றாக்குறை எதிர்கொண்டு பல உயிர்களை இழந்துள்ளோம்.
நடுத்தரப் பொருளாதார நாடுகள்
இந்தியாவில் நடக்கும் இந்தப் பாதிப்புகள் குறைந்த மற்றும் நடுத்தரப் பொருளாதார நாடுகளிலும் இது நடக்கும், எனவே இதை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என ஐஎம்எப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வேக்சின் கட்டாயம்
இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் 60 சதவீத மக்களுக்குக் கொரோனா வேக்சின் மூலம் பாதுகாப்பு அளிக்க உடனடியாக 1 பில்லியன் வேக்சினை வாங்க வேண்டும், இதுமட்டும் அல்லாமல் அதிகளவிலான தொகையை மருத்து துறையை மேம்படுத்த முதலீடு செய்ய வேண்டும் எனவும் ஐஎம்எப் அமைப்பு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications