இந்தியாவில் ஒரே நாளில் 2,151 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று எண்ணிக்கை ஐந்து மாத உச்சத்தை தொட்டு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி மொத்தம் 2,208 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட பின்பு தற்போது, இந்த அளவீட்டை நெருங்கியுள்ளது. இந்தியாவில் செவ்வாய்க்கிழமை 1,573 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் மொத்த ஆக்டிவ் தொற்று எண்ணிக்கை 11,903 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்த நிலையில் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 5,30,848 ஆக அதிகரித்துள்ளது.
இந்த 7 இறப்புகளில் 3 பேர் மகாராஷ்டிராவில், கர்நாடகாவில் ஒன்று, கேரளாவில் 3 பேர் என இறந்துள்ளனர்.
கோடை விடுமுறை
இந்தியாவில் பள்ளி பொதுத் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை துவங்கும் வேளையில், கொரோனா தொற்று எண்ணிக்கையில் 5 மாத உயர்வு என்பது சுற்றுலா செல்ல திட்டமிடுவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவோர் மத்தியில் கூடுதல் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்று பாதிப்பு இல்லாமல் 2வது கோடை விடுமுறை என்பதால் இந்தியா முழுவதும் சுற்றுலா துறையை சார்ந்த நிறுவனங்கள், அதிலும் முக்கியமாக மலை பிரதேசங்களில் இருக்கும் ஹோட்டல், ஹாஸ்பிடாலிட்டி நிறுவனங்கள் பலத்த ஏற்பாடு உடன் சுற்றுலா செல்ல தயாராகி வருகிறது.
பின்னடைவு
கொரோனா தொற்று காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் மிக முக்கியமானது ஹோட்டல் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி துறை தான். இந்த நிலையில் கோடை விடுமுறை இப்பிரிவுக்கு மிகவும் முக்கியமான வர்த்தக காலக்கட்டமாக இருக்கும் வேளையில் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்வு பெரும் பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடுமாற்றம்
இதே வேளையில் அடுத்த 2 முதல் 4 வாரத்தில் கொரோனா தொற்று குறைந்துவிட்டால் நிலைமை சீராகிவிடும். ஆனால் விடுமுறை காலம் என்பதால் பொதுவெளியில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும், இதனால் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
இதனால் Hospitality துறைக்கு இது சவால் மிகுந்த கோடை காலமாக மாற வாய்ப்புள்ளது.
5 மாத உச்சத்தில் கொரோனா
கொரோனா தொற்று எண்ணிக்கை இந்தியாவில் 5 மாத உச்சத்தை தொட்டு உள்ள வேளையில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், கோவிட்-19 மற்றும் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி பாதுகாப்பு உள்ளிட்ட மருத்துவமனை தயார் நிலைகள் குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் மத்திய அரசு கேட்டறிந்துள்ளது.
மருந்து விலை
இதேவேளையில் ஏப்ரல் 1 முதல் 384 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட மாறுபட்ட பார்முலேஷன் கொண்ட மருந்துகளின் விலைகள் 11 சதவீதத்திற்கும் அதிகமாக உயர உள்ளது. இது மக்களுக்கு பெரும் சுமையாக மாறக்கூடும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications