கோடை விடுமுறை நெருங்கியது.. கொரோனா 5 மாத உச்சம்.. யாருக்கு பாதிப்பு..?

இந்தியாவில் ஒரே நாளில் 2,151 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று எண்ணிக்கை ஐந்து மாத உச்சத்தை தொட்டு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி மொத்தம் 2,208 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட பின்பு தற்போது, இந்த அளவீட்டை நெருங்கியுள்ளது. இந்தியாவில் செவ்வாய்க்கிழமை 1,573 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் மொத்த ஆக்டிவ் தொற்று எண்ணிக்கை 11,903 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்த நிலையில் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 5,30,848 ஆக அதிகரித்துள்ளது.

இந்த 7 இறப்புகளில் 3 பேர் மகாராஷ்டிராவில், கர்நாடகாவில் ஒன்று, கேரளாவில் 3 பேர் என இறந்துள்ளனர்.

கோடை விடுமுறை

கோடை விடுமுறை

இந்தியாவில் பள்ளி பொதுத் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை துவங்கும் வேளையில், கொரோனா தொற்று எண்ணிக்கையில் 5 மாத உயர்வு என்பது சுற்றுலா செல்ல திட்டமிடுவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவோர் மத்தியில் கூடுதல் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

கொரோனா தொற்று பாதிப்பு இல்லாமல் 2வது கோடை விடுமுறை என்பதால் இந்தியா முழுவதும் சுற்றுலா துறையை சார்ந்த நிறுவனங்கள், அதிலும் முக்கியமாக மலை பிரதேசங்களில் இருக்கும் ஹோட்டல், ஹாஸ்பிடாலிட்டி நிறுவனங்கள் பலத்த ஏற்பாடு உடன் சுற்றுலா செல்ல தயாராகி வருகிறது.

பின்னடைவு

பின்னடைவு

கொரோனா தொற்று காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் மிக முக்கியமானது ஹோட்டல் மற்றும் ஹாஸ்பிடாலிட்டி துறை தான். இந்த நிலையில் கோடை விடுமுறை இப்பிரிவுக்கு மிகவும் முக்கியமான வர்த்தக காலக்கட்டமாக இருக்கும் வேளையில் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்வு பெரும் பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தடுமாற்றம்

தடுமாற்றம்

இதே வேளையில் அடுத்த 2 முதல் 4 வாரத்தில் கொரோனா தொற்று குறைந்துவிட்டால் நிலைமை சீராகிவிடும். ஆனால் விடுமுறை காலம் என்பதால் பொதுவெளியில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும், இதனால் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

இதனால் Hospitality துறைக்கு இது சவால் மிகுந்த கோடை காலமாக மாற வாய்ப்புள்ளது.

5 மாத உச்சத்தில் கொரோனா

5 மாத உச்சத்தில் கொரோனா

கொரோனா தொற்று எண்ணிக்கை இந்தியாவில் 5 மாத உச்சத்தை தொட்டு உள்ள வேளையில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், கோவிட்-19 மற்றும் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி பாதுகாப்பு உள்ளிட்ட மருத்துவமனை தயார் நிலைகள் குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் மத்திய அரசு கேட்டறிந்துள்ளது.

மருந்து விலை

மருந்து விலை

இதேவேளையில் ஏப்ரல் 1 முதல் 384 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட மாறுபட்ட பார்முலேஷன் கொண்ட மருந்துகளின் விலைகள் 11 சதவீதத்திற்கும் அதிகமாக உயர உள்ளது. இது மக்களுக்கு பெரும் சுமையாக மாறக்கூடும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+