இந்தியா கொரோனாவின் 2வது அலையில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் இன்று ரிசர்வ் வங்கி பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இதில் மிகவும் முக்கியமான 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட உதவும் மருத்துவமனை, உற்பத்தி நிறுவனங்கள், இறக்குமதி மற்றும் விற்பனையாளர்களுக்குக் கடன் அளிப்பதைத் தாண்டி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் மருத்துவச் சிகிச்சைக்கான பணத்தை வங்கிகளிடம் இருந்து கடனாகப் பெற அனுமதி அளித்துள்ளது ரிசர்வ் வங்கி.
கொரோனா சிகிச்சைக்குக் கடன்
கொரோனா சிகிச்சைக்கான செலவுகளை ஈடு செய்ய முடியாதவர்களுக்கு இத்தகைய கடன் பெறும் உதவியாக இறுக்கும். மேலும் இக்கடன் 3 வருட காலமும், ரெப்போ விகித அடிப்படையிலான வட்டி விகிதத்தில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் அளிக்கப்படும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
மார்ச் 31, 2022 வரை மட்டுமே
மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் மருத்துவச் சிகிச்சைக்கான சேவை மார்ச் 31, 2022 வரையில் மட்டுமே நடைமுறையில் இருக்கும் எனவும் மார்ச் 5ஆம் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவித்தார். இதோடு மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதே தற்போது மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு 2.0 திட்டம்
இதோடு இந்தக் கொரோனா காலத்தில் கடனுக்கான வட்டி மற்றும் அசலை திருப்பிச் செலுத்த முடியாதவர்களுக்குக் கடன் மறுசீரமைப்பு 2.0 திட்டத்தின் கீழ் முதல் முறையாகக் கடன் சலுகை பெறத் திட்டமிடுவோருக்கும் கடனுக்கான ஈஎம்ஐ சலுகை அளிக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.
கொரோனா முதல் அலை
2020ல் கொரோனா தொற்றுக் காலத்தில் அறிவிக்கப்பட்ட கடன் மறுசீரமைப்பு 1.0 திட்டத்தின் கீழ் சலுகை பெற்றவர்கள் 2 வருடத்திற்குக் குறைவான அளவில் சலுகை பெற்று இருந்தால் கடன் மறுசீரமைப்பு 2.0 திட்டத்தைப் பயன்படுத்தி அதிகப்படியாக 2 வருடம் வரை அதை நீட்டிக்க முடியும்.
கடனுக்கான ஈஎம்ஐ சலுகை
இதன் மூலம் ஒருவர் கடனுக்கான ஈஎம்ஐ செலுத்தவிதில் சலுகை அல்லது கடன் செலுத்துவதற்கான கூடுதல் காலம் பெற முடியும். இந்தக் கடன் மறுசீரமைப்பு 2.0 திட்டம் என்பது கிட்டதட்ட 2020ல் அளிக்கப்பட்ட கடனுக்கான ஈஎம்ஐ சலுகை போன்றதே, மேலும் இந்தச் சலுகை பெற கடனாளர்கள் வங்கிக்குச் சென்றே இதைப் பெற முடியும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications