இந்திய ரிசர்வ் வங்கி செய்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட்-ல் இந்திய வங்கிகளில் போதுமான நிதி ஆதாரங்கள் இருப்பதாகவும், தற்போதைய அளவீட்டை விடமும் மிகவும் மோசமான நிலை உருவானாலும் வங்கிகளில் அதைச் சமாளிக்கும் அளவிற்குப் போதுமான நிதி உள்ளதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

இதேபோல் இந்தியாவில் பொருளாதாரத்தில் கொரோனா 2வது அலையின் பாதிப்புகளை ஆய்வு செய்த போது, நாட்டின் வளர்ச்சி அளவீட்டு நாட்டில் எவ்வளவு விரைவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தப்படுகிறதோ அந்த அளவிற்குப் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டின் வளர்ச்சி நுகர்வோர் அளவீடு எந்த அளவிற்கு வேகமாக வளர்கிறதோ அந்த அளவிற்குச் சந்தையில் அதிக முதலீடுகள் குவியும், இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும் எனவும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த நுகர்வு அளவீட்டை எப்படி அதிகரிப்பது.. யாரிடம் காசு இருக்கு என்ற கேள்வியும் இதனுடன் எழுகிறது.

இதனுடன் சேவைத் துறையில் பல முக்கியத் துறைகள் வர்த்தகங்கள் கொரோனா தொற்று குறைந்த சில காலத்திற்கு மந்தமாகவே இருக்கும், குறிப்பாக விமானப் போக்குவரத்து, சுற்றுலாத் துறை, ஹாஸ்பிடாலிட்டி துறை போன்றவை வளர்ச்சி அடைய சில காலம் தேவைப்படும் என இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் நாட்டு மக்களுக்குத் தடுப்பு மருந்து வழங்குவதில் வேகமெடுக்கும் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவற்றில் அதிகளவிலான வளர்ச்சி அடைய முடியும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அனைத்தையும் தாண்டி முதல் கொரோனா அலையில் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை விடவும் 2வது அலையில் ஏற்பட்டு உள்ள பாதிப்புகள் குறைவு எனத் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications