இந்திய ரிசர்வ் வங்கி செய்த ஸ்ட்ரெஸ் டெஸ்ட்-ல் இந்திய வங்கிகளில் போதுமான நிதி ஆதாரங்கள் இருப்பதாகவும், தற்போதைய அளவீட்டை விடமும் மிகவும் மோசமான நிலை உருவானாலும் வங்கிகளில் அதைச் சமாளிக்கும் அளவிற்குப் போதுமான நிதி உள்ளதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

இதேபோல் இந்தியாவில் பொருளாதாரத்தில் கொரோனா 2வது அலையின் பாதிப்புகளை ஆய்வு செய்த போது, நாட்டின் வளர்ச்சி அளவீட்டு நாட்டில் எவ்வளவு விரைவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தப்படுகிறதோ அந்த அளவிற்குப் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டின் வளர்ச்சி நுகர்வோர் அளவீடு எந்த அளவிற்கு வேகமாக வளர்கிறதோ அந்த அளவிற்குச் சந்தையில் அதிக முதலீடுகள் குவியும், இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும் எனவும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த நுகர்வு அளவீட்டை எப்படி அதிகரிப்பது.. யாரிடம் காசு இருக்கு என்ற கேள்வியும் இதனுடன் எழுகிறது.

இதனுடன் சேவைத் துறையில் பல முக்கியத் துறைகள் வர்த்தகங்கள் கொரோனா தொற்று குறைந்த சில காலத்திற்கு மந்தமாகவே இருக்கும், குறிப்பாக விமானப் போக்குவரத்து, சுற்றுலாத் துறை, ஹாஸ்பிடாலிட்டி துறை போன்றவை வளர்ச்சி அடைய சில காலம் தேவைப்படும் என இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் நாட்டு மக்களுக்குத் தடுப்பு மருந்து வழங்குவதில் வேகமெடுக்கும் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவற்றில் அதிகளவிலான வளர்ச்சி அடைய முடியும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அனைத்தையும் தாண்டி முதல் கொரோனா அலையில் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை விடவும் 2வது அலையில் ஏற்பட்டு உள்ள பாதிப்புகள் குறைவு எனத் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications