இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா-வின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனரான சிபி குர்னானி டிசம்பர் 21 ஆம் தேதி உடன் இந்நிறுவன பணி, நிர்வாகக் குழு என அனைத்துப் பதவி, பொறுப்புகளிலும் இருந்து விலகுகிறார்.
டிசம்பர் 19 ஆம் தேதி அவருடைய பிறந்தநாள்-ஐ சிறப்பாகக் கொண்டாடும் வகையில் டெக் மஹிந்திராவில் அவர் பணியாற்றிய 19 வருடத்திற்கு நினைவாக 19 கிப்ட்-களைக் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் டெக் மஹிந்திராவின் சிஇஓ-வாக மோஹித் ஜோஷி பதவியேற்க உள்ளார்.

சிபி குர்னானி-யின் முழுப் பெயர் சந்தர் பிரகாஷ் குர்னானி, 1958 டிசம்பர் 19 ஆம் தேதி பிறந்த அவர் அவரது 40 பணி காலத்தில் ஹெச்சிஎல், HP, Perot சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனத்தில் பணியாற்றிக் கடந்த 19 வருடமாக டெக் மஹிந்திராவில் பணியாற்றி வருகிறார்.
இந்தியாவில் பல டெக் மற்றும் ஐடி சேவை நிறுவனங்கள் இருந்தாலும் டெக் மஹிந்திரா கொஞ்சம் ஸ்பெஷல் தான். 1986ல் டெக்னாலஜி அவுட்சோர்சிங் நிறுவனமாகப் பிரிட்டிஷ் டெலிகாம் மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமத்திற்கு மத்தியிலான கூட்டணி நிறுவனமாக உருவாகி 2012ல் பிரிட்டிஷ் டெலிகாம் வெளியேறி தனி நிறுவனமாக உருவெடுத்தது.
டெக் மஹிந்திராவின் வளர்ச்சியும், புகழும் 2009ல் பெரும் மோசடியில் சிக்கிய சத்யம் கம்பியூட்டர்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியது மூலம் துவங்கியது. இந்தியாவில் இன்போசிஸ் உடன் நேருக்கு நேர் மோதும் அளவுக்குப் பெரும் வர்த்தகத்தைக் கொண்டு இருந்த சத்யம் கம்பியூட்டர்ஸ் நிறுவனத்தில் அதன் நிறுவனர்கள் செய்த மோசடி பெரும் சரிவுக்குக் கொண்டு வந்தது யாராலும் மறக்க முடியாது
மஹிந்திரா குழுமம் சத்யம் கம்பியூட்டர்ஸ்-ஐ கைப்பற்றிய நாளில் இருந்து சிபி குர்னானி தான் சிஇஓ-வாக உள்ளார். 2012 தான் மஹிந்திரா சத்யம் - டெக் மஹிந்திரா இணைக்கப்பட்டு 2.5 பில்லியன் டாலர் ஐடி நிறுவனமாக உருவெடுத்தது. இன்று 1.21 லட்சம் கோடி ரூபாய் நிறுவனமாக உருவெடுத்து தொடர்ந்து டாப் 5 ஐடி நிறுவனங்களின் பட்டியலுக்குள்ளேயே உள்ளது டெக் மஹிந்திரா.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications