இந்தியாவின் 15வது துணை குடியரசுத் தலைவராக தமிழரும், மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9, 2025) தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவு பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் வேட்பாளர் பி. சுதர்ஷன் ரெட்டியை வாக்கெடுப்பில் வென்றார்.
ராஜிய சபா உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளைப் பெற்று பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தல், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் உடல்நலக் காரணங்களால் ஜூலை மாதம் பதவி விலகியதை அடுத்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் என்பது, நாட்டில் இரண்டாவது உயர்ந்த அதிகாரம் கொண்டவர், மேலும் இப்பதவியில் இருப்பவர் தான் மாநிலங்களவையின் (ராஜ்ய சபா) அதிகாரப்பூர்வ தலைவராகவும் பணியாற்றுகிறார். இதன் மூலம் சி.பி.ராதாகிருஷ்ணன் கிடைத்துள்ள வெற்றி முக்கியமான அதிகாரத்தை அவருக்கு கொடுத்துள்ளது.
தேர்தல் முடிவுகள்
சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளைப் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் பி.சுதர்ஷன் ரெட்டி 300 வாக்குகளைப் பெற்றார். மொத்தம் 767 வாக்குகள் பதிவாகின, இதில் 752 வாக்குகள் செல்லுபடியாகவும், 15 வாக்குகள் செல்லாதவையாகவும் அறிவிக்கப்பட்டன.
இந்தத் தேர்தல் நாடாளுமன்ற இல்லத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மாலை 6 மணிக்கு தொடங்கியது.
வாக்கு விவரங்கள்
முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், 2022ல் ஜகதீப் தன்கர் 528 வாக்குகளுடனும், 2017ல் வெங்கையா நாயுடு 516 வாக்குகளுடனும் வெற்றி பெற்றிருந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேர்தல் செயல்முறை
துணை குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது மாநிலங்களவையின் 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், 12 நியமன உறுப்பினர்கள் மற்றும் மக்களவையின் 543 உறுப்பினர்கள் ஆகியோரின் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். சுமார் 788 உறுப்பினர்கள் கொண்ட இந்த தேர்தலில் இன்று 781 உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க தகுதியுடையவர்களாக கருதப்பட்டனப்.
என்டிஏ கூட்டணி வலிமை
தற்போது, என்டிஏ கூட்டணி கட்சிக்கு சுமார் 439 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவாக உள்ளனர். மேலும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவும் கூடுதல் வலிமையை சேர்த்தது. இதற்கு மாறாக, இந்தியா கூட்டணியை ஆதரித்தவர்கள் 324 உறுப்பினர்கள் மட்டுமே. பிஜு ஜனதா தளம் (பி.ஜே.டி) மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) ஆகியவை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகியது, ராதாகிருஷ்ணனின் வெற்றி பாதையை மேலும் எளிதாக்கியது.
இந்தியா கூட்டணியில் இருந்து பிரிந்த ஆம் ஆத்மி கட்சி (ஏ.ஏ.பி) சுதர்ஷன் ரெட்டிக்கு ஆதரவு அளித்தாலும், எண்ணிக்கையில் பின்னடைவு இருந்தது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications