இந்தியாவில் கிரெடிட் கார்டுகள் தற்போது பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிரெடிட் கார்டுகள் ஒரு காலத்தில் நிதி சுதந்திரம் மற்றும் வசதிக்கான அடையாளமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது பல இளம் இந்தியர்களை கடன் வலைக்குள் தள்ளுகிறது என்று தான் சொல்ல வேண்டும். கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு குறிப்பாக மில்லியனல்கள் மற்றும் ஜெனரல் இஸட் தலைமுறையினரின் மத்தியில் அதிகமாகி விட்டதாக ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.
தற்போது பல கிரெடிட் கார்டுகள் "பை நவ் பே லேட்டர்" திட்டங்கள் மூலம் EMI அடிப்படையிலான பர்ச்சேஸ்களை ஊக்குவிக்கின்றன. இதன் காரணமாக கிரெடிட் கார்டு கடன்கள் இன்னும் அதிகரித்து விட்டன. மார்ச் 2024-ஆம் ஆண்டில் 2.6 லட்சம் கோடியாக இருந்த கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைகள் ஜூன் மாதம் 2024-ஆம் ஆண்டில் 2.7 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. இது மார்ச் 2019 ஆம் ஆண்டில் 87,686 கோடியிலிருந்து 5 ஆண்டுகளில் 24 சதவீத வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் அதிகரித்திருப்பது வேதனை அளிக்கும் விஷயமாக மாறி உள்ளது.

2024-ஆம் ஆண்டின் முதல் பாதியில், கிரெடிட் கார்டு தவணைகள் 2023-ஆம் ஆண்டின் இறுதியில் இருந்த 1.7 சதவீதத்தில் இருந்ததிலிருந்து 1.8 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று டிரான்ஸ்யூனியன் சிபில் தரவுகள் தெரிவிக்கின்றன. 0.1% உயர்வு புறக்கணிக்கக்கூடியதாகத் தோன்றினாலும், அதிகரித்து வரும் நிலுவையில் உள்ள கட்டணங்களை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
இதில் மிகவும் கவலை அளிக்கக் கூடிய விஷயம் என்னவென்றால் ஜென் Z தலைமுறையினர் EMI அடிப்படையிலான பர்சேஸ்கள் மற்றும் BNPL திட்டங்களின் வசதியினால் கடன் பெரும்பாலான இளம் மில்லினியல்கள் முழு கிரெடிட் வரம்பையும் பயன்படுத்தி கடனை அடைக்க சிரமப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
பொதுவாகவே கிரெடிட் கார்டு கடன்களுக்கு ஆண்டுக்கு 36 சதவீதம் முதல் 48 சதவீதம் வரை வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது. இது தெரியாமல் கடன் பெறுபவர்கள் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை மட்டுமே செலுத்தி வருகின்றனர். இதனால் அவர்களுக்கே தெரியாமல் வட்டி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் கடனை திருப்பி செலுத்துவது சற்று கடினமாகிறது.
கிரெடிட் கார்டு பயன்பாடு அக்டோபர் 2023-இல் 1.72 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. 2022-23 நிதியாண்டில் ரூ 4,072 கோடியாக இருந்தது.
கிரெடிட் கார்ட் பில்களை திருப்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனால், பாதுகாப்பற்ற கடன்களின் மூலம் வாரும் ஆபத்து குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கவலை தெரிவித்துள்ளது. என்னதான் கிரெடிட் கார்டுகள் உடனடி நிதி தேவைக்கு விரைவான தீர்வை வழங்கினாலும், அவை மாதத்திற்கே தோராயமாக 3.6 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வசூலிக்கலாம். மேலும் நீங்கள் பில் செலுத்த தவறவிடும்போது இந்த தொகை மேலும் வட்டிக்கு மேல் வட்டி போட்டு கடன் சுமை அதிகரிக்கலாம். எனவே கிரெடிட் கார்டுகளை பாதுகாப்போடு குறிப்பிட்ட கிரெடிட் வரம்புக்குள் பயன்படுத்துவது லாபகரமானதாக இருக்கும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications