இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, மேற்கு வங்க மாநிலம் பாஸ்சிம் மெதினிபூரில் உள்ள சல்போனி என்ற இடத்தில் ஸ்டீல் தொழிற்சாலையை தொடங்கி முழுநேர தொழிலதிபர் என்ன பதிவியை அடைய உள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஸ்பெயின் மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு 12 நாள் பயணமாக சென்ற குழுவில் இடம்பெற்றுள்ள கங்குலி, ஐந்து முதல் ஆறு மாதங்களில் தொழிற்சாலை கட்டி முடிக்கப்படும் என்று கூறினார்.

மேற்கு வங்காள பகுதியில் மூன்றாவது ஸ்டீல் தொழிற்சாலையை உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளோம். முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். நான் கிரிக்கெட் மட்டுமே விளையாட தகுதியானவர் என பலர் நம்புகிறார்கள்.
ஆனால் நான் 2007 இல் ஒரு சிறிய ஸ்டீல் ஆலையைத் தொடங்கினோம். ஆறு மாதங்களில் நாங்கள் மெதினிபூரில் எங்களின் புதிய ஸ்டீல் ஆலையை கட்டும் பணிகளை துவங்க உள்ளோம் என்று பேட்டி ஒன்றில் கங்குலி கூறினார்.
வியாழன் அன்று மாட்ரிட்டில் நடந்த 'பெங்கால் குளோபல் பிசினஸ் உச்சிமாநாட்டில் (பிஜிபிஎஸ்)' உரையாற்றிய கங்குலி, இன்னும் ஒரு வருடத்தில் தன்னால் அதிநவீன வசதி கொண்ட தொழிற்சாலையை கட்டி முடிக்க முடியும் என்று கூறினார்.
முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி 50-55 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாத்தாவால் தொடங்கப்பட்ட தனது குடும்ப வணிகத்தையும், அந்த நேரத்தில் மாநில அரசு எவ்வளவு ஆதரவாக இருந்தது என்பதையும் பெங்கால் குளோபல் பிசினஸ் உச்சிமாநாட்டில் குறிப்பிட்டு பேசினார்.
More From GoodReturns

T20 உலகக்கோப்பை இறுதி போட்டி: கோப்பையுடன் சேர்த்து இந்திய அணிக்கு காத்திருக்கும் பெரிய சர்ப்பிரைஸ்!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications