கொரோனா வைரஸால் உலகில் மொத்தம் 2.53 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 10,400 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் சுமார் 223 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 4 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள். கொரோனா வைரஸால், உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா தொடங்கி குட்டி குட்டி நாடுகள் வரை, ஒட்டு மொத்த உலக பொருளாதாரமுமே பெரிய பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறது.
இதில் இந்திய பொருளாதாரம் மட்டும் பாதிபடையாமல் இருக்க முடியாது. கொரோனா வைரஸ் பாதிப்பால், இந்த 2019 - 20 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியைத் தாண்டி அடுத்த 2020 - 21 நிதி ஆண்டில் கூட பாதிக்கப்படலாம் எனச் சொல்லிக் கோண்டு இருந்தார்கள் அனலிஸ்ட்கள்.
அனலிஸ்டுகள் எதிர்பார்த்தது போலவே, அடுத்த 2020 - 21 நிதி ஆண்டில் கூட, இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி வளர்ச்சி குறையும் எனச் சொல்லி இருக்கிறது க்ரிசில் என்கிற ஒரு சர்வதேச நிறுவனம்.
2020 - 21 நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 5.7 சதவிகிதம் வரை வளர வாய்ப்பு இருப்பதாக முன்புச் சொல்லி இருந்தது க்ரிசில் நிறுவனம். ஆனால் இப்போது இந்த கொரோனா வைரஸ் என்கிற பெரும் தொற்று நோயால், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.2 சதவிகிதமாக இருக்கலாம் எனக் குறைத்து இருக்கிறது.
வரும் ஏப்ரல் - ஜூன் 2020 காலாண்டுக்குள் உலக அளவில் கொரோனா வைரஸ் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இல்லை என்றால், இந்த கொரோனா பாதிப்பு உலக பொருளாதாரத்தை மேலும் கடுமையாக மந்தப் படுத்திவிடும் எனச் சொல்லி எச்சரித்து இருக்கிறது க்ரிசில் நிறுவனம்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் படுவேகமாக பரவிக் கொண்டு இருக்கிறது. இப்படி இந்தியாவில் வேகமாக கொரோனா பரவினால், இந்தியாவின் நுகர்வு, முதலீடுகள் மற்றும் உற்பத்தி எல்லாமே அடி வாங்கும். இது மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையைக் குறைக்கும், நிதிச் சந்தைகள் எல்லாமே அடி வாங்கும் எனச் சொல்லி இருக்கிறது க்ரிசில் நிறுவனம்.