தங்க நகைக்கடன் வாங்குவது இனி கஷ்டம்தான்.. கடுமையாகும் ரிசர்வ் வங்கி நடவடிக்கைகள்..!!

தங்கக் கடன்கள் மீது மத்திய ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இது சமீபத்தில் நான்கு NBFC நிறுவனங்களையும் தடை செய்துள்ளது. தங்கக் கடன் வழங்கும் விஷயத்தில் விதிகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதுகுறித்து உலகளவிலான ஆய்வு நிறுவனம் கிரிசில் வெளியிட்ட அறிக்கையின்படி, கடன் கட்டுப்பாடுகள் தங்கக் கடன்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் என்றும், கடன் வழங்குபவர்கள் தங்கக் கடன்களின் நடைமுறைகள் மற்றும் செயல்முறைகளை மதிப்பாய்வு செய்யவும் வழிவகுக்கப்படும் என்று கூறியுள்ளது.

சில நாட்களுக்கு முன், தங்க நகை மீதான கடன் விவகாரத்தில் சில குறைபாடுகளை ரிசர்வ் வங்கி சுட்டிக் காட்டியது. கடன் வழங்குபவர்கள் தங்கள் கொள்கைகள், நடைமுறைகளை முழுமையாக மதிப்பாய்வு செய்து குறைபாடுகளைக் கண்டறிந்து சரியான நேரத்தில் தீர்வு நடவடிக்கைகளைத் தொடங்குமாறு அறிவுறுத்தியது. இந்த மாற்றத்தால் தங்கக் கடன் வழங்குதல் பாதிக்கப்படும் என்றும், தங்கக் கடன் வணிகத்தின் வளர்ச்சி குறையும் என்றும் கிரிசில் அறிக்கை கூறியுள்ளது.

தங்க நகைக்கடன் வாங்குவது இனி கஷ்டம்தான்.. கடுமையாகும் ரிசர்வ் வங்கி நடவடிக்கைகள்..!!

சிறு நிதி வங்கிகள், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) உட்பட அனைத்து வணிக வங்கிகளும் கடன் மதிப்பு (LTV) விகிதம், காலாவதியான கடன் கணக்குகளுக்கான சொத்து வகை விதிமுறைகள், தங்கத்தின் இறுதிப் பயன்பாடு ஆகியவற்றைக் கண்காணிப்பதில் உரிய விடாமுயற்சியைக் காட்டவில்லை என்று சமீபத்திய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவற்றை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த சில காலாண்டுகளில் வங்கிகள் மற்றும் NBFC களின் தங்கக் கடன் போர்ட்ஃபோலியோவில் பதிவு செய்யப்பட்ட உயர்ந்த வளர்ச்சியை அடுத்து ரிசர்வ் வங்கி கவலையடைந்துள்ளதாக கூறியுள்ளது. தங்கம் விலை உயர்வால், பலர் தங்கத்திற்கு கடன் வாங்கி வருகின்றனர் என்றும், இதனால், தங்கக் கடன் வளர்ச்சி விகிதம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை நடவடிக்கைகளின் நோக்கம் தங்கக் கடன் விஷயத்தில் வழிகாட்டுதல்களை சீராகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதும், கடன் வாங்குவோர் மீதான வட்டிச் சுமையைக் குறைப்பதும் ஆகும் என்று கிரிசில் ரேட்டிங்ஸின் இயக்குநர் மாளவிகா போடிகா தெரிவித்துள்ளார். விதிமுறைகள் கடுமையாக்கப்படுவதால், அடுத்த சில காலாண்டுகளில் தங்கக்கடன்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதன் விளைவாக, வங்கிகள் மற்றும் NBFC களில் தங்கக் கடன் வளர்ச்சி குறையும் என்றும், ரிசர்வ் வங்கி காலக்கெடுவுக்குள் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு ஏற்ப தங்கக்கடன் வணிகத்தை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மத்திய கிழக்கின் புவிசார் அரசியல் நிலைமைகள் மற்றும் பதட்டங்களின் பின்னணியில், கச்சா எண்ணெய் விகிதம் சாதனை அளவில் அதிகரித்து வருகிறது. 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் ரூ. 80 ஆயிரத்தை நெருங்குகிறது. இதுவே சரியான வாய்ப்பு என நினைத்து பலர் தங்கக் கடன் வாங்கி வருகின்றனர். ஆனால் இதில் NBFCகள் தங்கக் கடன் விதிகளை மீறுவதாக சமீபத்தில் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. எனவே, இதன் காரணமாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+