உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் கிரிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo). இவரது வேகமும், திறமையும், கோல் அடிக்கும் துல்லியமும், அவரை மில்லியன் கணக்கான ரசிகர்களின் மனதில் நிலைத்து வைத்திருக்கின்றன. ரொனால்டோ தனது தொழில்முறை பயணத்தை போர்ச்சுகலின் சிறிய கிளப் மூலம் தொடங்கினார்.
பின்னர், ஸ்போர்டிங் லிஸ்பன் என்ற கிளப்பில் விளையாடி, 18-வது வயதில் மாஞ்செஸ்டர் யுனைடெட் என்ற பிரபல இங்கிலாந்து கிளப்புடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டார். பின்னர், ரியல் மாட்ரிட், ஜுவென்டஸ், மற்றும் மீண்டும் மாஞ்செஸ்டர் யுனைடெட் ஆகிய முக்கியமான கிளப்புகளில் சிறந்து விளங்கினார். தற்போது அவர் சவூதி அரேபியாவின் அல் நஸ்ர் என்ற கிளப்புக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், கிரிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் "அல் நஸ்ர்" (Al Nassr) கால்பந்து அணியுடன் கையெழுத்திட்டுள்ள புதிய ஒப்பந்தம் ஒன்று தற்போது உலகளவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு சுமார் 700 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.5,800 கோடிக்கு மேல்) என கூறப்படுகிறது. இது இரண்டு ஆண்டு கால ஒப்பந்தம் ஆகும். இது, விளையாட்டு வரலாற்றிலேயே மிக அதிக வருமானம் தரும் ஒப்பந்தமாக அமைந்திருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ரொனால்டோவுக்கு இந்த ஒப்பந்தத்தில் பரிசுத்தொகை மட்டுமின்றி பாதுகாப்பு, தனி ஜெட் விமானம், சொகுசு வீடு, குடும்பத்திற்கான சலுகைகள் போன்ற பல்வேறு வசதிகளும் வழங்கப்பட உள்ளன. பிரபல கால்பந்து பத்திரிகையாளர் பாப்ரிசியோ ரோமானோ மற்றும் தி சன் வெளியிட்ட தகவல்களின் படி, கிரிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இந்த ஒப்பந்தத்தின் மூலம் சம்பளமாக மட்டுமே $244.4 மில்லியன் (ரூ.2,040 கோடிக்கு மேல்) கிடைக்க உள்ளது.
சம்பளம் மட்டுமின்றி, $33.6 மில்லியன் (ரூ.280 கோடி+) கையெழுத்து போனஸ், $5.5 மில்லியன் (ரூ.45 கோடி+) விமான பயண செலவு சலுகை, Saudi Pro League-இல் டாப் ஸ்கோரராக இருந்தால் கூடுதல் $5.5 மில்லியன் போனஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும், பரபரப்பாகக் கருதப்படும் அம்சம் என்னவென்றால், ரொனால்டோவுக்கு Al Nassr கிளப்பில் 15% பங்குச் சொத்து வழங்கப்பட்டுள்ளது.
ரொனால்டோவின் சவூதி அரேபியா Al Nassr கிளப்புடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தில், அதிரடியான சம்பளத்துடன் பல்வேறு தனிப்பட்ட வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. ரொனால்டோவின் தினசரி வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் கவனிக்க முழு நேர வேலைக்கு நியமிக்கப்படுவர். சவூதி அரேபியாவில் வருமான வரி (Income Tax) இல்லாததால், ரொனால்டோ தனது முழு வருமானத்தையும் இந்தியா, UK, ஸ்பெயின் போன்ற நாடுகளை விட அதிகமாக வைத்திருக்க முடியும். விளையாட்டு பொருளாதார நிபுணர் விக்டர் மதேசன் கூறுகையில், "ரொனால்டோவுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் வசதிகள் சவூதி ப்ரோ லீக்-இன் முழு ஆண்டு வருவாயையும் முந்தக்கூடிய அளவில் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
தற்போது 932 கோல்களை அடித்துள்ள ரொனால்டோ, 1000 கோல்களை அடைய விருப்பம் தெரிவித்துள்ளார். வயது 40 ஆகும் நிலையில் கூட, அவர் இன்னும் சிறந்த விளையாட்டை கொடுத்து வருகிறார். அண்மையில் போர்ச்சுகலை, UEFA Nations League இறுதிப்போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றிபெறச் செய்தது. அல் நஸ்ருடன் Arab Club Champions Cup போட்டியில் வென்றிருந்தாலும், ரொனால்டோவுக்கு இன்னும் Saudi Pro League பட்டம் கைவசமில்லை. 2022-23 மற்றும் 2023-24 சீசன்களில் இரண்டாவது இடமும், 2024-25 சீசனில் மூன்றாவது இடமும் மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications