இந்த டிஜிட்டல் யுகத்தில் நாம் காசோலைகள் பயன்படுத்துவது என்பது பெருமளவில் குறைந்து விட்டது . ஆனால் இதற்கு முன்பு காசோலைகள் தான் மிக முக்கியமான ஒரு முறையாக இருந்தது.
பொதுவாக காசோலைகளை பூர்த்தி செய்யும்போது அதில் இடதுபுறம் மேல்முனையில் இரண்டு குறுக்கு கோடுகளை போடுவார்கள். அதற்கு என்ன அர்த்தம் என்பதை தான் நாம் இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

காசோலைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று திறந்த காசோலை (open cheque), இவ்வகை காசோலை என்பது பாதுகாப்பானது கிடையாது. இந்த காசோலையை வைத்திருப்பவர்கள் ஒருவேளை அதனை தவற விட்டாலோ அல்லது யாரேனும் எடுத்து கொண்டாலோ அவர்களால் கூட எளிதாக அதை வங்கியில் போட்டு பணம் பெற்றுக் கொள்ள முடியும். இதன் காரணமாகவே Negotiable Instruments Act 1881இன் படி காசோலைகளில் கோடு போடும் வழக்கம் வந்தது.
குறிப்பிட்ட நபருக்கு காசோலையில் உள்ள தொகை சென்று சேர வேண்டும் என்பதற்காக தான் குறுக்கே கோடு போடப்படுகிறது. காசோலையின் முனையில் இரண்டு கோடுகள் போடப்பட்டிருந்தால் அதனை கிராஸுடு செக் (crossed cheque) என அழைப்பார்கள்.
இந்த காசோலையில் யாருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதோ அவரால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் அல்லது அவருக்கு மட்டுமே பணம் சென்று சேர வேண்டும் என்பது இதன் அர்த்தம் ஆகும்.
ஒரு காசோலையின் ஓரத்தில் இதுபோல இரண்டு கோடுகளை குறிப்பிடும்போது அந்த காசோலையில் உள்ள பணமானது அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபரின் வங்கி கணக்கிற்கு மட்டுமே செல்லும். அதில் யாருடைய பெயர் குறிப்பிட்டு இருக்கிறதோ அவரது பெயருக்கு அல்லது அவர் இந்த நபருக்கு பணத்தை செலுத்தலாம் என ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டு இருந்தால் அந்த நபருக்கு செல்லும்.
காசோலைகளில் குறுக்கு கோடுகளை போடுவதில் இரண்டு விதம் உள்ளது. கோடுகளின் இடையே Account Payee என எழுதி இருந்தால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபரிடம் மட்டுமே பணத்தை வழங்க வேண்டும் என அர்த்தம்.
உதாரணத்திற்கு காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர் பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறார் எனில், இந்த கோடுகளின் இடையே குறிப்பிட்ட வங்கியின் பெயர் எழுதப்பட்டிருக்கும். அதில் எந்த வங்கியின் பெயர் உள்ளதோ அதற்கு மட்டுமே இந்த பணம் செல்லும்.
காசோலைகள் தவறாக பயன்படுத்தப்பட கூடாது, உரிய நபருக்கு அதில் உள்ள பணம் செல்ல வேண்டும் என்பதற்கு தான் குறுக்கு கோடுகள் போடப்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications