சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்திருந்தாலும், இந்தியாவில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றாமல் அதிகப்படியான பழைய விலைக்கே விற்பனை செய்கிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்த்த போது விலையை மாற்றாமல் வைத்திருந்த காரணத்தால், 5 மாதம் ஏற்பட்ட இழப்பை மத்திய அரசு தற்போது ஈடு செய்து வருவதாகத் தெரிகிறது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை
பிப்ரவரி மாதத்திற்குப் பின்பு சர்வதேச பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம் தான் ஒரு பேரல் 90 டாலர் விலையில் குறைந்தது. ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு கச்சா எண்ணெய் விநியோகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விலை அதிகரித்தது.இந்நிலையில் 7 மாதத்திற்குப் பின்பு தற்போது 90 டாலருக்குக் கீழ் குறைந்துள்ளது.
ரஷ்யா, OPEC
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ரஷ்யா தனது எரிவாயு பைப்லைன்-ஐ முடக்கியுள்ள வேளையிலும், OPEC மற்றும் OPEC+ அமைப்புகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கத் திட்டமிட்டு இருக்கும் வேளையில் சர்வதேச பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது.
கச்சா எண்ணெய் விலை
கச்சா எண்ணெய் விலை எவ்வளவு மாறினாலும் இந்தியாவில் ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலை சுமார் 158 நாட்களாகத் தொடர்ந்து ஓரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், டீசல் விலை
இந்நிலையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்த்த போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே இருந்தது என எண்ணெய் வள துறை அமைச்சர் ஹதீப் சிங் பூரி தெரிவித்தார். மேலும் கச்சா எண்ணெய் விலை 88 டாலருக்குக் கீழ் வந்தால் மட்டுமே எரிபொருள் விலையில் சில தளர்வுகள் எதிர்பார்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரீடைல் எரிபொருள் விற்பனை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) ஆகியவை நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த 5 மாதங்களாக விலையை உயர்த்தாமல் உள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications