அமெரிக்கா - ஈரான் ராணுவ படைகள் ஹார்முஸ் நீரிணை இருக்கும் பெர்சியன் வளைகுடாவில் தாக்குதலை நடத்தி வரும் வேளையில், இப்போர் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. ஈரானுக்கு ஆதாரவாக விளங்கும் ஏமன் நாட்டின் ஹவுதி படைகள் செங்கடலில் அதாவது பாம் அல் மண்டெப் நீரிணை இருக்கும் பகுதியில் 2 சவுதி அரேபியாவின் எண்ணெய் டேங்கர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹவுதி அமைப்பு ஏற்கனவே பாம் அல் மண்டெப் நீரிணை வழித்தடத்தை முடக்கியிருக்கும் வேளையில் தற்போது தாக்குதல் நடத்த துவங்கியுள்ளது.

இதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் சந்தையில் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது, இன்று மாலை வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 6.5 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பேரல் விலை 100 டாலரை கடந்தது. இதேபோல் WTI கச்சா எண்ணெய் விலை 5.5 சதவீதம் வரையில் உயர்ந்து 93 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
முர்பான் கச்சா எண்ணெய் விலை சற்றும் எதிர்பார்காத வகையில் 17.70 சதவீதம் அதிகரித்து ஒரு பேரல் 105.3 டாலர் வரையில் உயர்ந்து உலக நாடுகளை நடுங்க வைத்துள்ளது. முர்பான் கச்சா எண்ணெய் என்பது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருக்கும் அபுதாபியில் இருந்து வர்த்தக சந்தைக்கு வரும் கச்சா எண்ணெய் ஆகும்.
இதன் தாக்கம் இந்தியாவில் தற்போது எதிரொலிக்காது என்றாலும் டாலருக்கு எதிராக இருக்கும் ரூபாய் மதிப்பு (96.80) கூடுதலாக சரியும் போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் வாய்ப்பு உருவாகும்.
இன்று ஹவுதி அமைப்பு செய்த தாக்குதல் என்பது ஈரான் போர் இதுவரையில் இல்லாத வகையில் மிகப்பெரியதாக வெடிக்கும் என்பதை உணர்த்தும் சிக்னலாக உள்ளது. ஈரான் போர் துவங்கியதில் இருந்து தாக்குதல் அனைத்தும் ஹார்முஸ் வழித்தடத்தில் மட்டுமே இருந்தது, ஆனால் தற்போது முதல் முறையாக பாப் அல் மண்டெக் வழித்தடத்தில் நடத்துள்லது மூலம் சந்தைக்கு வரும் சவுதி அரேபியாவின் எண்ணெய்யும் பாதிக்கும்.
ஹவுதிக்கள் பாப் அல் மண்டெக் வழித்தடத்தை மூடினால் உலக நாடுகளின் 15 சதவீத கடல்வழிப்போக்குவரத்து பாதிக்கும். ஈரான் போர் காரணமாக மட்டும் கச்சா எண்ணெய் விலை இந்த மாதத்தில் மட்டும் 35 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது, இந்த வருடத்தில் 60 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications
