இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று குறைந்து லாக்டவுன் கட்டுப்பாடுகள் தொடர்ந்து தளர்த்தப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.
இதனால் அனைத்து வகையான வர்த்தகம், உற்பத்தி, சேவைகள் வளர்ச்சி அடைந்து வரும் காரணத்தால் எரிபொருளின் தேவை கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆனால் கச்சா எண்ணெய் உற்பத்தியில் பெரிய அளவிலான மாற்றம் செய்யாமல் இருக்கும் காரணத்தால் இதன் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
எரிபொருள் தேவை பல முன்னணி பொருளாதார நாடுகளில் அதிகரித்துள்ள காரணத்தால் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் இதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் யிலாக இன்றைய வர்த்தகத்தில் ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 69.79 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் WTI கச்சா எண்ணெய் விலை 66.51 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
70 டாலர் விலை
பிரென்ட் கச்சா எண்ணெய் மற்றும் WTI கச்சா எண்ணெய் ஆகிய இரண்டும், மார்ச் மாத உச்ச அளவை தாண்டியுள்ளது. 70 டாலர் என்ற மெய்யான நிலைக்குக் கச்சா எண்ணெய் வந்துள்ளது என எண்ணெய் தரகு நிறுவனமான PVM-ன் ஸ்டீபன் பெர்ன்நாக் விமர்சனம் செய்துள்ளார்.
அமெரிக்காவில் எண்ணெய் இருப்பு
மேலும் அமெரிக்காவில் பல்வேறு காரணங்களால் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ள காரணத்தால் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இருப்பு என்பது கணிசமாகச் சரிந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலையில் குறையாமல் தொடர்ந்து உயர்வு பாதையில் இருக்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்நிலையில் இந்தியாவில் சுமார் 6 வாரங்களுக்குப் பின் பெட்ரோல், டீசல் உயர்ந்து வரும் சூழ்நிலையில் கொரோனா தொற்றுக் காரணமாகச் சில மாநிலங்களில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தளர்வுடன் இருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கவிட்டு முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது, பல மாநிலங்கள் முழு லாக்டவுன் அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறது.
எரிபொருள் தேவை குறையும்
இந்தியாவில் லாக்டவுன் அறிவிப்பட்டால் காரணத்தால் போக்குவரத்து, உற்பத்தி, தொழிற்சாலை ஆகியவை முடங்கும், இதனால் எரிபொருள் தேவை என்பது பெரிய அளவில் குறையும்.
கச்சா எண்ணெய் இறக்குமதி
உலகிலேயே அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவில் கச்சா எண்ணெய் தேவை குறைந்துள்ளதால் சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை குறையத் துவங்கியுள்ளது.
சரியை துவங்கியது
கச்சா எண்ணெய் சந்தையில் மாலை வர்த்தகத்தில் WTI கச்சா எண்ணெய் விலை 0.94 சதவீதம் சரிந்து 65.01 டாலருக்கும், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.80 சதவீதம் குறைந்து 68.45 டாலருக்கும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை
இந்தியாவில் லாக்டவுன் விதிக்கப்பட்டால் அதிகளவிலான முதலீடுகள் வெளியேறும், இதனால் ரூபாய் மதிப்பில் பாதிப்பு ஏற்படும். இதேவேளையில் மத்திய அரசு தொடர்ந்து விலை உயர்த்தும் திட்டத்தில் இருக்கும் காரணத்தால் மீண்டும் ப்ரீமியம் பெட்ரோல் விலை 100 ரூபாயும், சாதாரண பெட்ரோல் விலை 95 ரூபாயை தாண்ட அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

SBI முதல் BoB வரை..பொதுத்துறை வங்கி பங்குகளில் ஏன் ரத்த ஆறு? முக்கிய காரணங்கள்இதோ?

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் முக்கிய அப்டேட்

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

50 பைசா சரிவு.. ஆடிப்போன இந்தியா.. ஈரான் போரால் இனி என்னவெல்லாம் நடக்குமோ..?!

இந்த ஏரியாவுல எந்த கப்பல் நுழைஞ்சாலும் தட்டி தூக்குவோம்!! ஈரான் மிரட்டலால் ஸ்தம்பித்த உலக நாடுகள்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications