கச்சா எண்ணெய் உற்பத்தியில் கிங்மேக்கராக இருக்கும் ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பலியான நேரத்தில் இதன் விலை பெரிதும் பாதிக்கப்பட்டது. இவரது மரணம் கச்சா எண்ணெய் உற்பத்தியிலும், வர்த்தகத்திலும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது மொத்தமாக நிலைமை மாறியுள்ளது.
இந்த நிலையில் ஆசியச் சந்தை வர்த்தகத்தில் செவ்வாய்க்கிழமை நிலைமை மொத்தமாக மாறியது என்றால் மிகையில்லை. நேற்றைய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கண்டு உலக நாடுகள் பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், இன்று காலை வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள் சரிந்தன.

இன்றைய விலை உயர்வுக்கு முக்கியமான காரணம் அமெரிக்கப் பொருளாதார சூழ்நிலையும், கச்சா எண்ணெய் பயன்பாட்டு குறித்த கணிப்பு தான். அமெரிக்கப் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் நீண்ட காலத்திற்கு உயர்வாக இருக்கும் என்ற அச்சமும், நுகர்வோர் மற்றும் தொழில்துறையில் கச்சா எண்ணெய் தேவையைக் குறைக்கும் என முதலீட்டாளர்கள் கணித்துள்ளனர்.
இதன் எதிரொலியாகக் கச்சா எண்ணெய் விலை இன்று குறைந்துள்ளது, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 83.23 டாலராகக் குறைந்து, இது நேற்றைய விலையைக் காட்டிலும் 0.57% சரிவை சந்தித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலைகள் ஒரு பேரலுக்கு 79.32 டாலர் என 0.6% சரிவைக் கண்டது.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி அதிகாரிகள், பணவீக்கம் குறைவதை உறுதிப்படுத்தும் கூடுதல் அறிகுறிகளுக்காகக் காத்திருப்பதாகத் திங்களன்று தெரிவித்ததால், இரு பென்ச்மார்க் கச்சா எண்ணெய் விலை இன்று அதிகரித்துள்ளது. அமெரிக்கா பெடரல் ரிசர்வ் பணவீக்கம் குறையாமல் வட்டி விகிதத்தைக் குறைக்காது.
இதேபோல் அமெரிக்கா தனது வட்டி விகிதத்தைக் குறைக்காவிட்டால் சர்வதேசச் சந்தையில் தற்போது இருக்கும் மந்த நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொருளாதாரத்தில் மந்த நிலை தொடர்ந்தால் கச்சா எண்ணெய் தேவை குறையும், இதன் காரணமாகவே திங்கட்கிழமை உயர்ந்த கச்சா எண்ணெய் விலை செவ்வாய்க்கிழமை குறைந்துள்ளது.
“வட்டி விகிதக் குறைப்புக்கான வாய்ப்பு குறைந்து வருவதால், சந்தையில் பலவீனமான டிமாண்ட் இருக்கும் என்ற அச்சம் தற்போது கச்சா எண்ணெய் விலை சரிவுக்கு வழிவகுத்தது,” என்று ஃபூஜிடோமி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் பகுப்பாய்வாளர் டோஷிடாகா டசாவா கூறினார்.
அமெரிக்காவில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது, உற்பத்தி செலவுகளை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நுகர்வோர் செலவுகளையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, எரிபொருள் தேவை குறைய வாய்ப்புள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தவோ அல்லது தற்போது இருக்கும் அதிகப்படியான வட்டி விகிதத்தைத் தொடர்ந்து நோக்கமாகக் கொண்டுள்ளது. வட்டி விகிதங்கள் உயரும்போது, கடன் வாங்குவது கடினமாகிறது, இது முதலீடுகளைக் குறைக்கும் மற்றும் நுகர்வோர் செலவு செய்வதையும் குறைக்கும். இதன் விளைவாக, எரிபொருள் தேவை குறைவதற்கு வழிவகுக்கும்.
முதலீட்டாளர்கள் இந்த காரணிகளைக் கருத்தில் கொண்டு எதிர்கால எரிபொருள் தேவை குறைவாக இருக்கும் என்று அச்சத்தால் இதன் மீதான முதலீடுகள் குறைந்து கச்சா எண்ணெய் விலைகள் குறைந்து வருகின்றன.
அமெரிக்காவில் பணவீக்கம் எப்படிக் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி எப்படி வட்டி விகிதங்களை நிர்வகிக்கிறது என்பதைப் பொறுத்து எண்ணெய் விலைகள் எவ்வாறு மாறுபடும் என்பதைக் கண்காணிக்க இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டியது இருக்கும்.
உலகளாவிய புவிசார் அரசியல் நெருக்கடிகள் போன்ற பிற காரணிகளும் எண்ணெய் விலைகளைப் பாதிக்கும். ஆகவே, எதிர்கால எண்ணெய் விலை போக்கு நிச்சயமற்ற நிலையிலேயே உள்ளது. மேலும் கச்சா எண்ணெய் விலையும், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று பிணைந்துள்ளது.
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் முக்கிய அப்டேட்

இந்த ஏரியாவுல எந்த கப்பல் நுழைஞ்சாலும் தட்டி தூக்குவோம்!! ஈரான் மிரட்டலால் ஸ்தம்பித்த உலக நாடுகள்!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

OMCs பங்குகளுக்கு செக் வைத்த கச்சா எண்ணெய்! BPCL,HPCL பங்குகள் கடும் வீழ்ச்சி:யுபிஎஸ் கொடுத்த ஷாக்!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

50 பைசா சரிவு.. ஆடிப்போன இந்தியா.. ஈரான் போரால் இனி என்னவெல்லாம் நடக்குமோ..?!

ரிலையன்ஸ் முதல் ஜேகே டயர்ஸ் வரை..அடி வாங்கும் முக்கிய பங்குகள்! உங்க லிஸ்டில் ஏதும் இருக்கா?

SBI முதல் BoB வரை..பொதுத்துறை வங்கி பங்குகளில் ஏன் ரத்த ஆறு? முக்கிய காரணங்கள்இதோ?

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!



Click it and Unblock the Notifications