சென்னை: ஒரு நாட்டின் பணவீக்கம் உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கும் கச்சா எண்ணெய் விலை கடந்த 6 நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. புதன்கிழமை காலை ஆசியச் சந்தை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலைகள் முந்தைய நாளை விட சிறிய அளவில் குறைந்துள்ளன.
இந்தியாவில் தேர்தல் முடிந்த நிலையில் பிஜேபி கட்சி பெரும்பான்மையைப் பெற முடியாத காரணத்தால் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயடு ஆகியோரின் கூட்டணியில் NDA 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்க உள்ளது.

தேர்தல் முடிந்த நிலையில் மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக இருக்கும் பெட்ரோல், டீசல் விலை குறைக்க வாய்ப்புகள் உருவாகியுள்ளது. கச்சா எண்ணெய் குறைந்து வரும் வேளையில் புதிய கூட்டணி அரசு எப்போது விலையை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அமெரிக்க பெட்ரோலியம் நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்த 6 நாட்களில் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் கையிருப்பு அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அந்நாட்டின் பணவீக்கம் பெரிய அளவில் குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளது, இதேபோல் கச்சா எண்ணெய் டிமாண்ட் அளவில் பெரும் தேக்க நிலை உருவாகும் எனவும் கருத்து நிலவுகிறது.
இன்றைய வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலைகள் காலை வர்த்தகத்தில் ஒரு பேரலுக்கு 14 சென்ட் (0.2%) சரிந்து $77.38 ஆக இருந்தது. அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலைகள் ஒரு பேரலுக்கு 18 சென்ட் (0.3%) குறைந்து $73.07 ஆக இருந்தது.
கச்சா எண்ணெய் விலை சரிவுக்கு முக்கியமான காரணம் OPEC+ குழு அதன் உற்பத்தி அளவை நிர்ணயம் செய்யும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2 ஆம் தேதி) நடந்தது. இந்த கூட்டத்தில் உலகளவில் கச்சா எண்ணெய் தேவை வளர்ச்சி பலவீனமடைந்து வருவதற்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், அக்டோபர் மாதம் முதல் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியான பிறகு திங்கட்கிழமை வர்த்தகத்தில் பிரெண்ட் மற்றும் WTI கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 3 டாலரும், செவ்வாய்க்கிழமை 1 டாலரும் குறைந்த நிலையில், இன்று சில சென்ட்கள் மட்டுமே குறைந்து தொடர்ந்து 6 நாள் சரிவைக் கச்சா எண்ணெய் சந்தை பதிவு செய்துள்ளது.
அமெரிக்க பெட்ரோலியம் நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் அடிப்படையில், கடந்த வாரம் அமெரிக்க கச்சா எண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு அதிகரித்துள்ளது. கையிருப்பு அதிகரிப்பு என்பது பொதுவாக டிமாண்ட்-ஐ காட்டிலும் சப்ளை ஆதிகமாக இருக்கும் போது நடக்கும் ஒரு செயல்.
சந்தை ஆய்வாளர்கள் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் கையிருப்பு 2.3 மில்லியன் பேரலுக்கு குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அமெரிக்க பெட்ரோலியம் நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் கடந்த வாரம் மே 31ம் தேதி முடிந்த வாரத்தில் கச்சா எண்ணெய் கையிருப்பு 4.1 மில்லியன் பேரலுக்கும் மேல் அதிகரித்துள்ளதாக டேட்டா காட்டுகிறது.
பெட்ரோல் கையிருப்பும் 4 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது மூலம் அமெரிக்காவின் பணவீக்கம் திறம்படக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் இதே காலகட்டத்தில் OPEC+ அமைப்புகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து விலையைக் குறைக்கத் திட்டமிடுவதால் இது அமெரிக்காவுக்குப் பின்னடைவாக அமையும்.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

தீவிரமடையும் சிலிண்டர் தட்டுப்பாடு: அவசர ஆலோசனை நடத்திய மோடி.. கமிட்டி அமைத்த மத்திய அரசு..!!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் முக்கிய அப்டேட்

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

OMCs பங்குகளுக்கு செக் வைத்த கச்சா எண்ணெய்! BPCL,HPCL பங்குகள் கடும் வீழ்ச்சி:யுபிஎஸ் கொடுத்த ஷாக்!

50 பைசா சரிவு.. ஆடிப்போன இந்தியா.. ஈரான் போரால் இனி என்னவெல்லாம் நடக்குமோ..?!

SBI முதல் BoB வரை..பொதுத்துறை வங்கி பங்குகளில் ஏன் ரத்த ஆறு? முக்கிய காரணங்கள்இதோ?

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. வரிசை கட்டி நிற்கும் மக்கள்..!!

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?



Click it and Unblock the Notifications