உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொழில்துறை, போக்குவரத்து என இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் தற்போது கச்சா எண்ணெய் தேவை என்பது அதிகளவில் குறைந்துள்ளது.
இதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் மீதான முதலீடு குறைந்துள்ளது மட்டும் அல்லாமல் வர்த்தக போட்டியின் காரணமாக OPEC அமைப்பில் இருக்கும் நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு எதிராக சந்தையில் அதிகளவிலான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதால் கச்சா எண்ணெய் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு தொடர் சரிவை எட்டி வருகிறது.
இந்த நிலை அடுத்த சில வாரங்களுக்கு நிச்சயம் மாறப்போவது இல்லை என்பது உறுதியாகியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் ஒரு பேரல் 20 டாலருக்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இந்தியாவில் பெட்ரோல் விலை குறையுமா..?
கச்சா எண்ணெய் விலை
புதன்கிழமை வர்த்தகத்தில் WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 23.41 டாலருக்கு வர்த்தகமானது. இதேபோல் பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 26.02 டாலர் என்கிற 16 வருட சரிவில் வர்த்தகமானது. இது 2008இல் ஒரு பேரல் 147 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விலை அதிமாக இருந்த போது இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை என்னவோ அதே தான் இப்பவும் இருக்கிறது.
கணிப்புகள்
கச்சா எண்ணெய் சந்தை குறித்து கோல்டுமேன் சாச்சஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய சரிவை எதிர்கொள்ளும். இதுமட்டும் அல்லாமல் அல்லாமல் தற்போது நிலவும் வர்த்தகம் மற்றும் உற்பத்தி சூழ்நிலை தொடர்ந்து நிலவினால் கண்டிப்பாக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 20 டாலர் என்கிற மோசமான நிலையை அடையும்.
அமெரிக்கா
கடந்த 15 வருடத்தில் அமெரிக்கா தொடர்ந்து தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து இதன் முலம் அதிகளவிலான வர்த்தகத்தையும் வருமானத்தையும் பெற்று வருகிறது. அமெரிக்காவின் வர்த்தக வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் ரஷ்யா அரபு நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பிற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே அரபு நாடுகள் விலையை குறைத்து ரஷ்ய வர்த்தகத்தை வீழ்த்த உற்பத்தியை அதிகரித்தது.
ஆனால் இப்போது எல்லோருக்கும் பெரிய அளவிலான வருமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகம் பாதித்தது, அமெரிக்கா தான் என்றால் மிகையில்லை.
இதுதான் நல்லது..
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பதற்றம், பொருளாதார சிக்கல்கள் மற்றும் சரிவுகள் மற்றும் கொரோனா பாதிப்பு ஆகியவை தற்போது உலக நாடுகளை பெரிய அளவில் பாதித்து வரும் நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பது நல்லது தான். உலகில் தற்போது ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரும் வரையிலும் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும் நன்மை தான் என கிரிசில் அமைப்பு தெரிவித்துள்ளது.
உற்பத்தி
இதில் என்ன கொடுமை என்றால் ஏப்ரல் மாத துவக்கத்தில் இருந்து அரபு நாடுகள் தங்களது உற்பத்தியை தற்போதைய அளவை விடவும் அதிகமாக அளவில் உற்பத்தி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இது நடந்தால் ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெய் 20 டாலருக்கும் குறைவான விலைக்கு செல்லும்.
அப்போதாவது இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை குறையுமா..?
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications