உலகளவில் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை.. இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.86.72ஆக சரிவு..!!

அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில், இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசுகள் குறைந்து ரூ.86.72ஆக உள்ளது. அமெரிக்கா, ஈரானில் உள்ள மூன்று அணுஉற்பத்தி நிலையங்களை தாக்கியதைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதுவே இதுவே ரூபாயின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அமெரிக்க டாலர் வலுவடைந்து, உள்நாட்டு பங்குசந்தை குறைந்துள்ளது. இது கூடுதலாக ரூபாயின் மீது அழுத்தம் ஏற்படுத்தியுள்ளது என வெளிநாட்டு நாணய வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், உலகளாவிய எண்ணெய் அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய், எதிர்கால வர்த்தகத்தில் பீப்பாய்க்கு 2 சதவீதம் உயர்ந்து 77.27 அமெரிக்க டாலராக இருந்தது. வெளிநாட்டு நிறுவன முதலீடுகள் அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவின் வெளிநாட்டு நாணய சேமிப்புகள் உயர்ந்துள்ளதாகவும் இதனால், இன்னும் கடும் வீழ்ச்சி ஏற்படுவதைத் தடுக்க முடிந்ததாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலகளவில் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை.. இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.86.72ஆக சரிவு..!!

அமெரிக்கா ஈரானின் அணு உற்பத்தி நிலையங்களை தாக்கியதன் விளைவாக 2025 ஜனவரிக்குப் பிறகு முதல்முறையாக Brent கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, 77.27 அமெரிக்க டாலராக இருந்தது. இருப்பினும், தாக்குதலின் தீவிரத்தையும், ஈரான் பதிலடி அளிக்கப் போவதாகக் கூறியதையும் அடுத்து இந்த விலை குறைவாகவே இருக்கிறது.

இதுதொடர்பாக Finrex Treasury Advisors LLP நிறுவனத்தின் Treasury தலைவர் அனில் குமார் பன்சாலி கூறியிருப்பதாவது, "உலகில் உள்ள கச்சா எண்ணெய் வழங்கலின் ஐந்தில் ஒரு பங்கு Hormuz வளைகுடா வழியாக செல்கிறது. இப்பாதையை ஈரான் மூடலாம் என்ற பயம்தான் சந்தையில் உள்ளது" என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா, ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்குவதைத் தவிர்த்து, ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் இருந்து எண்ணெய் தேவையை திருப்திப்படுத்த முறையாக நடந்து வருகிறது" என்றும் அனில் குமார் பன்சாலி தெரிவித்துள்ளார். இருப்பினும், "உயர்ந்த எண்ணெய் விலை, இந்தியாவின் தற்சமய கணக்கை (Current Account) பாதிக்கும் என்பதிலும், அதன் விளைவாக ரூபாயின் மதிப்பு சிறிதளவு குறையவும் வாய்ப்புள்ளது. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி இதில் தலையிட்டு, சந்தையில் நிலைதடுமாற்றம் ஏற்படாமல் ஒழுங்கை பராமரிக்கிறது" என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா - ஈரான் போரின் விளைவாக, கச்சா எண்ணெய் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரூபாயின் மீது அழுத்தம், மாநில மற்றும் பன்னாட்டு சந்தை மாற்றங்கள் என இவை அனைத்தும், நாணய மாற்ற விகிதத்தில் குறுகிய காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். BSE செக்செக்ஸ் (30 ஷேர் குறியீடு) 705.65 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து ரூ.81,702.52ஆக உள்ளது. NSE நிஃப்டி (50 ஷேர் குறியீடு) 182.85 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து ரூ.24,929.55ஆக உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.7,940.70 கோடிக்கு இக்விட்டி பங்குகளை வாங்கியுள்ளனர். ஜூன் 13, 2025ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் வெளிநாட்டு நாணயச் சேமிப்பு 2.294 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து, மொத்தம் 698.95 பில்லியன் டாலராக உள்ளது. குறிப்பாக, இந்தியா எண்ணெய் இறக்குமதி மூலோபாயத்தை மாற்றி ஆபத்தை குறைத்துள்ளது. ஆனால், எண்ணெய் விலை உயர்வு காரணமாக ரூபாயில் சிறிதளவு அழுத்தம் தொடரலாம். ரிசர்வ் வங்கி சந்தையை நிலைநிறுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பங்குச் சந்தை வீழ்ச்சி, ஆனால் FII முதலீட்டுகள் மற்றும் அதிகரித்த forex சேமிப்புகள் சில நன்மைகளை வழங்குகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+