வீழ்ந்தது கிரிப்டோகரன்சி சந்தை.. வெறும் 4 மணி நேரத்தில் 128 பில்லியன் டாலர் இழப்பு..!!

உலக கிரிப்டோகரன்சி சந்தை வெள்ளிக்கிழமையான நேற்று வெறும் 4 மணி நேரத்தில் சுமார் 128 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிட்காயின், எத்தீரியம், எக்ஸ்ஆர்பி (XRP) போன்ற முன்னணி கிரிப்டோகரன்சிகள் அனைத்தும் திடீரென சரிந்தன. இந்த சரிவு, 2022 ஆம் ஆண்டில் நிகழ்ந்த எஃப்டிஎக்ஸ் (FTX) பரிமாற்றத்தின் வீழ்ச்சி போன்ற நினைவுகளை முதலீட்டாளர்கள் மத்தியில் மீண்டும் கொண்டு வந்துள்ளது.

முக்கிய நாணயங்களின் நிலை : உலகின் மிகவும் மதிப்புமிக்க கிரிப்டோகரன்சியான பிட்காயின், 2% க்கும் அதிகமாகச் சரிந்து 1,05,875.80 டாலர் என்ற விலையை எட்டியது. எக்ஸ்ஆர்பி (XRP) 1.89% வீழ்ச்சியடைந்தது. எத்தீரியம் 6% க்கும் அதிகமாகக் குறைந்து பெரும் சரிவைச் சந்தித்தது.

வீழ்ந்தது கிரிப்டோகரன்சி சந்தை.. வெறும் 4 மணி நேரத்தில் 128 பில்லியன் டாலர் இழப்பு..!!

டிஜிட்டல் சொத்துகளை எதிர்காலமாக கருதுபவர்களுக்கு பிட்காயின் இன்னும் முதல் தேர்வாக இருந்தாலும், கடந்த ஒரு வாரமாகவே சந்தையில் பெரிய அளவில் பதற்றம் நிலவியது. நேற்று ஏற்பட்ட சரிவு, சந்தையில் கிட்டத்தட்ட 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடன் ஒப்பந்தங்களை தூண்டியுள்ளது.

தொடரும் பின்னடைவு : கடந்த தின நாட்களுக்கு முன்புதான், கிரிப்டோ சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய கடன் ஒப்பந்தங்களைக் கண்டது. கடந்த வார வெள்ளிக்கிழமை பிற்பகுதியில், 19 பில்லியன் டாலருக்கும் அதிகமான கடன் நிலுவைகள் சந்தையில் இருந்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டன.

G20 எச்சரிக்கை : G20 நாடுகளின் ஆபத்துக் கண்காணிப்புக் குழுவாக செயல்படும் நிதி நிலைத்தன்மை வாரியம் (Financial Stability Board - FSB), கிரிப்டோ சந்தைகளை கட்டுப்படுத்த நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் முக்கியமான குறைபாடுகள் உள்ளதாக எச்சரித்துள்ளது. இந்த குறைபாடுகள் தொடர்ந்தால், உலக நிதி அமைப்பின் நிலைத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், 2023ஆம் ஆண்டில் கிரிப்டோ சந்தைகளை பரம்பரை நிதி அமைப்புகளுக்குச் சமமாகக் கொண்டு வருவதற்கான முழுமையான பரிந்துரைகளை FSB வெளியிட்டிருந்தது.

ஆல்ட்காயின்கள் மீது பெரும் பாதிப்பு: பிட்காயினைத் தவிர மற்ற அனைத்து கிரிப்டோகரன்சிகளையும் "ஆல்ட்காயின்கள்" என்று அழைக்கப்படுகிறது. சமீபத்தில் ஏற்பட்ட சந்தை வீழ்ச்சியால், இந்த வகை நாணயங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல ஆல்ட்காயின்கள், சில கிரிப்டோ பரிமாற்றங்களில் 80% வரை மதிப்பிழந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது, ஆல்ட்காயின் முதலீட்டாளர்களுக்கு இழப்புகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

பரிமாற்றங்களின் பங்கு : கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விற்பனை அழுத்தத்தில், கிரிப்டோ பரிமாற்றங்கள் முக்கிய பங்கு வகித்தன. சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்கள் வைத்திருந்த ஈட்டுத்தொகை (collateral) சில நேரங்களில் குறைந்தது. அதனால், அவர்கள் செய்திருந்த முதலீடுகள் பாதுகாப்பற்றதாக மாறியது. இதன் விளைவாக, கிரிப்டோ பரிமாற்றங்கள், அந்த முதலீட்டாளர்களின் நிலைகளை தானாகவே மூடுவதற்காக நடவடிக்கை எடுத்தன. இதுவே விற்பனையை மேலும் துரிதப்படுத்தி, சந்தை வீழ்ச்சியை ஆழப்படுத்தியது.

இதுகுறித்து வாஷிங்டனைச் சேர்ந்த மோனக்ஸ் யுஎஸ்ஏ வர்த்தகத் துறை இயக்குநர் ஜுவான் பெரெஸ் கூறுகையில், "அமெரிக்கா உடனான சீனாவின் உறவு நிலையற்றதாக இருக்கும் வரை கிரிப்டோ சந்தை நிலையாக இருக்க முடியாது. கிரிப்டோவுக்கு நல்ல காலம் வர வேண்டும் என்றால், முதலிலேயே வலுவான சொத்துகள் சந்தையில் சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.

அதோடு, அடிப்படை நிதி நிலைமைகள் சரியாக இல்லாதபோது பிட்காயின் என்றாலும், எத்தீரியம் என்றாலும் கிரிப்டோ நாணயங்கள் தங்களது மதிப்பை நிலைநிறுத்துவதில் சிரமப்படுகின்றன" என அவர் குறிப்பிட்டார்.

எனவே, இந்த எதிர்பாராத சரிவு கிரிப்டோ சந்தையின் நிலையற்ற தன்மையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் இது உணர்த்துகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+