கிரிப்டோகரன்சிகளின் முதன்மையாக கரன்சியாக பார்க்கப்பட்ட பிட்காயின், முதலீட்டாளர்களின் பெரும் நம்பிக்கைகளில் ஒன்று எனலாம். ஆனால் பிட்காயின் மதிப்பானது மிக மோசமான சரிவினைக் கண்டு வருகின்றது எனலாம்.
இதற்கிடையில் பிட்காயின் மதிப்பானது 25000 டாலர்களுக்கு கீழாக காணப்படுகின்றது.
இதற்கிடையில் மற்ற அனைத்து ட்ஜிட்டல் கரன்சிகளும் பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது.
சந்தை மூலதனம் சரிவு
என்ன தான் காரணம்? ஏன் இந்தளவுக்கு மோசமான சரிவினைக் கண்டுள்ளது? இனியாவது ஏற்றம் காணுமா? இனி கிரிப்டோகளின் எதிர்காலம் எப்படியிருக்கும்? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிரிப்டோ சந்தையின் மூலதன மதிப்பானது, 1.04 டிரில்லியன் டாலர் என்ற அளவுக்கு (காலை 8 மணி நிலவரப்படி) சரிவினைக் கண்டுள்ளது.
பிட்காயின் நிலவரம் என்ன?
தற்போது 3 மணி நிலவரப்படி 12.06% சரிவினைக் கண்டு 24,167.79 டாலர்களாக சரிவினைக் கண்டு வர்த்தகமாகி வருகின்றது.
கொரோனா காலகட்டத்தில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் டாலரின் மதிப்பானது மிக மோசமான சரிவினைக் கண்டது. அந்த காலட்டத்தில் மக்களின் வாழ்வாதரத்திற்காக மத்திய வங்கியானது பணத்தினை அச்சிட தொடங்கியது. வேலையிழந்தவர்களுக்கு நேரடியாக கைகளில் பணப்புழக்கத்தினை அதிகரித்தது. இதன் காரணமாக டாலரின் மதிப்பானது சரிவினைக் கண்டது. இதன் காரணமாக அப்போது முதலீடுகள் அனைத்தும் அமெரிக்க சந்தையில் இருந்து வெளியேற தொடங்கின. இது பாதுகாப்பு புகலிடமான தங்கம், பத்திர சந்தை, கிரிப்டோகரன்சி என பிரிந்தன.
முதலீடுகள் திரும்பலாம்
இந்த நிலையில் தற்போது அமெரிக்க வளர்ச்சியினை மேம்படுத்தும் விதமாகவும், அதிகரித்து வரும் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வரவும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. வரவிருக்கும் கூட்டத்திலும் வட்டி விகிதம் கட்டாயம் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதன் காரணமாக வளர்ச்சி விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடுகள் வெளியேற்றம்
இதற்கிடையில் அமெரிக்க சந்தையில் இருந்து வெளியேறி வந்த முதலீடுகள் மீண்டும் சந்தையில் குவியத் தொடங்கியுள்ளன. இதன் காரண்மாக கிரிப்டோகரன்சிகளில் இருந்த முதலீடுகளும் வெளியேறத் தொடங்கியுள்ளன. இதற்கிடையில் தான் கிரிப்டோசந்தையும் சரிவினைக் கண்டு வருகின்றது.
ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்
கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து டாலரின் மதிப்பு ஏற்றத்தில் இருந்து வருகின்றது. ஜூன் 14 அன்று சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கலாம் என்றும், இது சந்தையில் மிகப்பெரிய அளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டாளார்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

தொடர்ந்து 2ஆவது நாளாக விலை சரிந்த தங்கம்..!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

பங்குச் சந்தை ரிஸ்க் பயமா? லாபத்திற்கு கியாரண்டி தரும் Bonds - முதலீடு செய்வது எப்படி?

PPF கணக்கு ஆரம்பிக்க போறீங்களா? இந்த ஒரு தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

ETF vs மியூச்சுவல் ஃபண்ட்: உங்கள் பணத்தை எதில் போட்டால் டபுள் லாபம்?

வாழ்க்கையை என்ஜாய் பண்ண சீக்கிரம் ரிடையர்மெண்ட்? மாதம் ரூ.75,000 டூ 1 லட்சம் பென்ஷன் வேண்டுமா?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

10 கிராம் தங்கம் 2 லட்சம் வரை உயர வாய்ப்பு..! தங்கம் $6000, வெள்ளி $100 எட்டுமா?

டாடா கெமிக்கல்ஸை ஓரங்கட்டிய 2 பங்குகள்! மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் செய்த அதிரடி முதலீடு!



Click it and Unblock the Notifications