சிஎஸ்பி வங்கியின் பங்குகள் இன்று வெளியீடு.. தெரிஞ்சுக்க வேண்டிய முக்கிய தகவல்கள்

மும்பை: சிஎஸ்பி எனப்படும் கத்தோலிக் சிரியன் வங்கி வெள்ளிக்கிழமையான இன்று தொடங்கி வரும் 26ம் தேதியான செவ்வாய் வரை அதாவது 3 நாட்கள் (சனி ஞாயிறு விடுமுறை) தனது பங்குகளை வெளியிடுகிறது.

கூடுதல் முதலீடு தேவைப்படும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட்டு பொதுமக்களிடம் நிதி திரட்ட செபியிடம் விண்ணப்பிக்கும் அந்த வகையில் கத்தோலிக் சிரியன் வங்கி விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளது.

எனவே இன்று முதல் ஐபிஒ எனப்படும் ஆரம்ப பொதுவழங்கலில் பங்குகளை பட்டியலிட்டுள்ளது. சிஎஸ்பி வங்கி ரூ.10 முகமதிப்புடன் ரூ.193-195க்கு பங்குகளை விற்பனை செய்து அதன் மூலம் 400 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. புதிய விற்பனை மூலம் 24 கோடி ரூபாயும், ஆபர் பார் சேல் அடிப்படையில் மீதமுள்ள பங்குகளை விற்பனை செய்து நிதி திட்ட முடிவு செய்துள்ளது.

பட்டியலிடப்படும்

பட்டியலிடப்படும்

இந்த பங்குகள் டிசம்பர் 2, 2019 அன்று ஒதுக்கப்படும் மற்றும் டிசம்பர் 4 அன்று தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) மற்றும் மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) இரண்டிலும் பட்டியலிடப்படும். இந்தியாவின் பழமையான தனியார் துறை வங்கிகளில் ஒன்றான சிஎஸ்பி கிட்டத்தட்ட 13 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது (மார்ச் 31, 2019 வரை).

 50.1 சதவீத பங்குகள்

50.1 சதவீத பங்குகள்

சி.எஸ்.பி வங்கியின் முக்கிய -முதலீட்டாளர் மற்றும் புரோமோட்டரான மொரிஷியஸைச் சேர்ந்த ஃபேர்ஃபாக்ஸ் இந்தியா ஹோல்டிங்ஸ் நிறுவனம் 50.1 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது, அது ஐபிஓவில் எந்தப் பங்குகளையும் வழங்கவில்லை என்று மும்பையைச் சேர்ந்த பங்குச்சந்தை தரகு நிறுவனமான எம்காய் தனது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.

எம்காய் தகவல்

எம்காய் தகவல்

வங்கியை பட்டியலிடுவதற்கான ரிசர்வ் வங்கியின் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே சிஎஸ்பி ஐபிஓவுக்கு செல்வதாகவும் எம்காய் தெரிவித்துள்ளது. 'கத்தோலிக்க சிரியன் வங்கி' மத செல்வாக்கு, பலவீனமான சொத்து தரம் மற்றும் துணை-மூலதன நிலை தொடர்பான பிரச்சினைகள், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் போன்றவைள் காரணமாக அந்த வங்கியை பி.சி.ஏ-க்கு அருகில் தள்ளியது.

மாறிய நிறுவனம்

மாறிய நிறுவனம்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்த அந்நிறுவனம் தற்போதைய எம்.டி. மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சி.வி.ராஜேந்திரனை (மூத்த வங்கியாளர்) நியமித்த பின்னர் இது ஒரு பெரிய மாற்றத்தைக் கண்டது, அவர் ஒரு முதலீட்டாளர்-கம் ஊக்குவிப்பாளராக எஃப்.ஐ.எச்.எம் (ஃபேர்ஃபாக்ஸ்) உள்நுழைவதற்கு வசதி செய்தார், ரிசர்வ் வங்கியின் கொள்கை தளர்வுக்கு அழைப்பு விடுத்தார்.

செல்வாக்கு குறைப்பு

செல்வாக்கு குறைப்பு

தற்போதைய நிர்வாகம் ஒரு மத நிறுவனத்தின் செல்வாக்கைக் குறைப்பதன் மூலமும், வேலை செய்யாத ஊழியர்களை தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் ஓய்வு பெறுவதன் மூலமும், வங்கியை திருத்தியுள்ளதாக பங்குச்சந்தை தரகு நிறுவனமான எம்காயின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மிகப்பெரிய மாற்றம்

மிகப்பெரிய மாற்றம்

வங்கியின் மொத்த செயல்படாத சொத்துக்கள் (ஜிஎன்பிஏ) விகிதம் 2018 நிதியாண்டில் 7.9 சதவீதமாக இருந்ததில் இருந்து 2.9 சதவீதமாக மாறியிருக்கிறது. கடந்த 2-3 ஆண்டுகளில் வங்கி அதன் முதல் கட்ட மாற்றத்தில் நியாயமான முறையில் சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும் எம்காயின் அறிக்கையில் குறிப்பிட்ப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+