இந்திய வேலைவாய்ப்பு சந்தை பெரிய அளவிலான மாற்றங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் ஊழியர்களுக்கு ஏற்ப நிறுவனங்களும் தங்களின் விதிமுறைகளைத் தளர்த்தி வருகிறது.
இந்திய நிறுவனங்களின் இந்தத் திடீர் மாற்றத்திற்குப் பின் முக்கியமான காரணமும் உண்டு, தற்போது சந்தையில் வேலைவாய்ப்புகள் அதிகமாகியிருக்கும் நிலையில் திறமையான ஊழியர்களைத் தக்க வைத்தால் தான் அதிகப்படியான வர்த்தகத்தையும், வருமானத்தையும் ஈட்ட முடியும்.
இதனால் நிறுவனங்களுக்கு ஏற்ப ஊழியர்கள் மாறும் நிலை மலையேறி ஊழியர்களுக்காக நிறுவனங்கள் மாறத் துவங்கியுள்ளது. இப்படி இந்திய நிறுவனங்கள் மத்தியில் ஏற்பட்ட முக்கியமான மாற்றம் தான் இது.
5 நாள் மட்டுமே வேலை
இந்தியாவில் தற்போது பெரும்பாலான நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் தற்போது வாரத்தில் 5 நாள் மட்டுமே வேலை செய்ய விரும்பும் நிலை உள்ளது. இதற்கிடையில் நிறுவனங்கள் 6 நாள் வேலை செய்யக் கூறி வற்புறுத்தினால் வேலையை விடும் நிலை உருவாகியுள்ளது.
நிர்வாகப் பிரிவு ஊழியர்கள்
நிர்வாகப் பிரிவு ஊழியர்களே 6 நாள் வேலையை எதிர்க்கும் நிலையில், அவர்களுக்குக் கீழ் இருக்கும் ஊழியர்களும் 5 நாள் வேலை என்ற பிரிவுக்கு வருகின்றனர். இதனால் நிறுவனங்கள் தற்போது தானாக முன்வந்து 5 நாள் வேலைவாய்ப்புக் கட்டமைப்பை அனைத்துப் பிரிவுகளுக்கு அளிக்கத் துவங்கியுள்ளது.
ஹெச்ஆர் பிரிவு ஊழியர்கள்
இதே நேரத்தில் வாரம் 6 வேலை நாட்கள் கொண்ட நிறுவனங்களில் சேர ஊழியர்கள் விரும்புவது இல்லை, இதனால் இத்தகையை நிறுவனங்களுக்கு ஊழியர்களைத் தேடுவது என்பது பெரிய சவாலாக உள்ளது என ஹெச்ஆர் பிரிவு ஊழியர்களும் புலம்பி வருகின்றனர்.
கடைசி நிலை ஊழியர்கள்
இதேபோல் வாரம் 6 நாள் வேலை நாட்கள் கொண்ட நிறுவனத்தில் சேருவோர் வேலைவாய்ப்புச் சந்தையில் தேர்வாகாமல் கடைசி நிலையில் இருக்கும் ஊழியர்கள் தான் சேர்கின்றனர். இதனால் நிறுவனங்களின் வளர்ச்சியும் தொய்வடைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
CXO பிரிவு ஊழியர்கள்
பல முன்னணி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் CXO பிரிவில் ஊழியர்களைத் தேடும் போது வாரத்தில் 6 நாள் வேலை என்ற விதிமுறையைக் கேட்டாலே நிறுவனங்களை நிராகரித்து வருகின்றனர். டிஜிட்டல் மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் பெரும்பாலும் 5 நாள் மட்டுமே வேலைநாட்களாகக் கொண்டு உள்ளது.
விரைவில் மாற்றம்
ஆனால் உற்பத்தி, இன்பராஸ்டக்சர், எனர்ஜி போன்ற பல துறையில் 5.5 நாட்கள் 6 நாட்களை நிரந்தர வேலை நாட்களாகக் கொண்டு உள்ளது. இந்த நிலையை மாற்ற நிறுவனங்களுக்கு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பரிந்துரை செய்து வருகிறது. அடுத்தச் சில ஆண்டுகளில் இந்தியாவில் 90 சதவீத நிறுவனங்கள் வாரத்தில் 5 வேலை நாட்களை நிரந்தரமாக்கும்.
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications