மிக்ஜாம் புயல் காரணமாக நவம்பர் 3,4ம் தேதிகளில் தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. வரலாறு காணாத அளவுக்கு பெய்த கனமழையால் சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.
பல இடங்களில் தண்ணீர் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கியது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தால் மாடியில் தஞ்சம் அடைந்தனர். மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்தனர்.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் வியாபாரிகள் கடுமையான இழப்பை சந்தித்தனர். பல தொழிற்சாலைகளில் மழை நீர் புகுந்ததால் ஆலைகளை இயக்க முடியாத சூழல் நிலவுகிறது. கடந்த சில தினங்களாக மழைநீர் வடிய தொடங்கியுள்ளது. இது மக்களுக்கு சிறிது நிம்மதியை அளித்துள்ளது. இருப்பினும் சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்ப சிறிது காலம் பிடிக்கும் என்று சென்னைவாசிகள் கூறுகின்றனர்.
மிக்ஜாம் புயல் தமிழகத்தில் ரூ.11,000 கோடிக்கு மேல் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னை சேர்ந்த குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் அமைப்பான இந்தியா தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் கே.இ.ரகுநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 3.5 லட்சத்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த நான்கு மாவட்டங்களில் 3 மாதங்களுக்கு சொத்து வரி, மெட்ரோ வரி மற்றும் கழிவுநீர் கால்வாய் வரிகளை ரத்து செய்ய வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட எந்திரங்களை மறுசீரமைப்பு மற்றும் பழுதுபார்ப்பதற்கு நிறுவனங்களுக்கு சலுகை வட்டியில் கடன் வழங்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்துக்கு அரசு உத்தரவிட வேண்டும்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு குறித்த கால கடனை திரும்ப செலுத்த மூன்று மாத கால அவகாசம் வழங்குமாறு இந்திய ரிசர்வ் வங்கியிடம் மாநில அரசு கோரிக்கை வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
சென்னையிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள பாக்ஸ்கான், பெகாட்ரான், டெய்ம்லர், ஹூண்டாய் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் ஆலைகள் உள்ளன. பாக்ஸ்கான், பெகாட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கி விட்ட போதிலும், தாழ்வான நீரில் மூழ்கிய பகுதிகளில் அமைந்துள்ள சில உற்பத்தி ஆலைகள் இன்னும் செயல்பட தொடங்கவில்லை என தகவல்.
மிக்ஜாம் புயல் இரண்டே நாளில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டு சென்று விட்டது. இந்த புயல் பெரிய பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியதோடு, 14 பேரின் உயிரையும் பறித்து விட்டது. உயிர் இழந்வர்களில் பெரும்பகுதியினர் சென்னைவாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications