இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனமான காட்ரிஜ் சென்னை அருகே செங்கல்பட்டில் புதிய உற்பத்தி ஆலையை அமைக்க 515 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து மற்றொரு FMCG நிறுவனம் தமிழ்நாட்டுக்கு வருவதாகத் தெரிகிறது.
தென்னிந்தியாவில் புதிய உற்பத்தி ஆலையை அமைக்க 135 கோடி ரூபாய் முதலீடு செய்ய டாபர் இந்தியா-வின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகப் புதன்கிழமை அறிவித்துள்ளது. இந்தத் தொழிற்சாலை எந்த மாநிலத்தில் வரும் என்பது வெளிப்படையாக அறிவிக்கவில்லை, ஆனால் தமிழ்நாட்டுக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளது.

இந்தப் புதிய உற்பத்தி தொழிற்சாலை டாபர் நிறுவனத்தின் ஆயுர்வேத ஹெல்த்கேர், பர்சனல் கேர் மற்றும் ஹோம் கேர் தயாரிப்புகளான டாபர் ஹனி, டாபர் ரெட் பேஸ்ட் மற்றும் ஓடோனில் ஏர் ஃப்ரெஷனர்களை உற்பத்தி செய்யும். இந்தப் புதிய வசதிக்கான சாத்தியமான இடங்களை நிறுவனம் ஆராய்ந்து வருவதாகத் தெரிகிறது.
டாபர் இந்தியா தென்னிந்தியாவில் கிரீன்ஃபீல்ட் தொழிற்சாலையை அமைக்க மேற்கொண்ட முதல் முதலீடு இது என்பதால் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதுக்குறித்து டாபர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மோஹித் மல்ஹோத்ரா கூறுகையில் தென்னிந்தியாவில் எங்கள் வணிகம் அதிகரித்துள்ளது, டாபரின் மொத்த உள்நாட்டு வர்த்தகத்தில் சுமார் 18-20 சதவீதத்தைத் தென்னிந்தியாவில் மட்டுமே வைத்துள்ளது.
தென்னிந்தியாவில் எங்களின் வர்த்தகம் அதிகரித்து வருவதால், இப்பகுதி தேவையை மேம்படுத்தப்பட்ட முறையில் பூர்த்திச் செய்யும் வகையில் ஒரு புதிய உற்பத்தி நிலையத்தை நிறுவ முடிவு செய்துள்ளோம் என்று மோஹித் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
டாபர் இந்தியா தற்போது 13 தொழிற்சாலைகளை வைத்து உற்பத்தி, பேகேஜ், விநியோகம், வர்த்தகம் செய்து வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications