அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு வெளிநாட்டவர்கள் அமெரிக்காவிற்கு வந்து வேலை செய்வதை கட்டுப்படுத்தும் நோக்கில் விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது . குறிப்பாக இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தக்கூடிய ஹெச்1பி விசாவில் நாள்தோறும் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறது.
இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புக்கு அமெரிக்காவை தான் சார்ந்து இருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. அமெரிக்காவுக்கு மாற்றாக சில நாடுகளும் இருக்கின்றன அங்கே நல்ல சம்பளத்தோடு வேலை கிடைக்கிறது . இந்தியர்களைப் போன்ற திறன்மிகு ஊழியர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கக் கூடிய நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளில் எல்லாம் நல்ல சம்பளமும் நல்ல வேலை வாய்ப்பும் இந்தியர்களுக்கு கொட்டி கிடக்கின்றன. அவை எந்தெந்த நாடுகள், அமெரிக்காவுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்காதவர்கள் வேறு எந்த நாடுகளுக்கு செல்லலாம் என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

1.கனடா : அமெரிக்காவுக்கு மாற்றாக இருக்கக்கூடிய முக்கியமான ஒரு நாடாக கனடா இருக்கிறது. திறன்மிகு வெளிநாட்டு ஊழியர்களை கனடா அரசு federal skilled worker program மூலம் விசா வழங்கி வேலைவாய்ப்பு பெற உதவுகிறது. குறிப்பாக ஐடி துறையில் கனடாவில் சிறந்த வேலை வாய்ப்புகள் இருக்கின்றன . இவ்வாறு வரக்கூடிய திறன் மிக வெளிநாட்டவர்களுக்கு கனடாவில் எளிமையாக நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதால் அமெரிக்காவுக்கு மாற்றான ஒரு சிறந்த தேர்வாக கனடா இருக்கும்.
2.ஜெர்மனி: ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார பவர்ஹவுஸ் என அழைக்கப்படுகிறது ஜெர்மனி . உற்பத்தி துறை மற்றும் பொறியியல் சார்ந்த துறைகளில் இயங்கக்கூடிய நிபுணர்களுக்கு எல்லாம் ஜெர்மனி மிகச் சிறந்த வாய்ப்பை பெற்றுத் தருகிறது. இங்கே Job Seeker Visa வெளிநாட்டவர்களுக்கு கிடைக்கிறது. இதன் மூலம் வெளிநாட்டவர்கள் இந்த விசாவை பெற்ற ஜெர்மனிக்கு சென்று ஆறு மாதம் தங்கியிருந்து வேலை தேடலாம். வேலை கிடைத்துவிட்டால் அதனை வேலை செய்வதற்கான work permit-ஆக மாற்றிக்கொண்டு தங்கி வேலை செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஜெர்மனியில் தொடர்ந்து தங்கி வேலை செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய ப்ளூ கார்ட் திட்டம் என்ற ஒரு விசா திட்டத்தையும் ஜெர்மனி அமல்படுத்தியிருக்கிறது.
3. சிங்கப்பூர்: ஆசிய நாடுகளில் சிறந்த வேலை வாய்ப்பு தரக்கூடிய ஒரு நாடாக சிங்கப்பூர் இருக்கிறது. திறன்மிகு ஊழியர்கள் எம்பிளாய்மென்ட் பாஸ் விண்ணப்பம் செய்து ஐடி , பேங்கிங் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவுகளில் சிங்கப்பூரில் வேலைக்கு சேரலாம். இங்கே அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்பு கிடைக்கும் .
4. ஐக்கிய அரபு அமீரகம்: இந்தியர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரக்கூடிய ஒரு நாடாக இருக்கிறது. ஐடி, சுகாதாரம் கட்டுமானம் , ஹாஸ்பிடாலிட்டி என பல துறைகளிலும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இங்கே வருமான வருமான வரி செலுத்த வேண்டிய தேவை இல்லை என்பதால் இந்தியர்களின் விருப்பமான தேர்வாக தொடர்ந்து நீடிக்கிறது.
5. ஆஸ்திரேலியா : தரமான வாழ்க்கை மற்றும் சிறந்த பணி சூழ்நிலை கொண்ட ஒரு நாடாக தொடர்ந்து தக்க வைத்திருக்கிறது. General Skilled Migration program என்ற திட்டத்தின் கீழ் திறன்மிகு வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு சென்று வேலை செய்ய முடியும் . ஐடி ,பொறியியல், சுகாதாரம் என பல்வேறு துறைகளிலும் திறன்மிகு வெளிநாட்டவர்களுக்கு இங்கு வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன.
More From GoodReturns

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications