இந்தியாவில் கார் மற்றும் பைக் விற்பனை இந்த வருடத்தின் துவக்கத்தில் இருந்தே சிறப்பாக இருந்த நிலையில் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் திட்டமிட்டு புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதற்காகப் புதிய கார்களைப் பல தரப்பட்ட விலைகளில் அறிமுகம் செய்தது.
எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு எஸ்யூவி கார்களுக்கான டிமாண்ட், விருப்பம் அதிகமாக இருந்தது, இது ஆட்டோமொபைல் சந்தையில் பெறும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் டிசம்பர் மாதம் இயர் எண்ட் டிஸ்கவுன்ட்-ஐ பெரும்பாலான நிறுவனங்கள் அறிவித்த நிலையில் இந்த மாதம் கார் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தை
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இந்த டிசம்பர் மாத தள்ளுபடி மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது, இதற்கு முக்கியக் காரணமும் உண்டு. பொதுவாக ஒவ்வொரு வருடமும் அறிவிக்கப்படும் சாதாரண தள்ளுபடி விற்பனையைத் தாண்டி 2023 ஜனவரி மாதம் முதல் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தனது கார்களின் விலையை அதிகரிக்க உள்ளது.
மாசு உமிழ்வு விதிமுறை
இதைத் தொடர்ந்து மத்திய அரசு கடுமையான மாசு உமிழ்வு விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக விற்பனை ஆகாமல் எஞ்சியிருக்கும் கார்களை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் அதிகளவிலான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கார் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது.
4வது பெரிய சந்தை
உலகிலேயே 4வது பெரிய ஆட்டோமொபைல் சந்தை கொண்ட நாடாக இருக்கும் இந்தியாவில் டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி வரையில் திரட்டப்பட்ட தகவல் படி இந்த மாதம் மொத்த விற்பனை 400000 ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
4 லட்சம் கார்கள்
இதுவரையில் இந்திய வரலாற்றில் டிசம்பர் மாதம் விற்பனையில் அதிகப்படியான கார்களை விற்பனை செய்தது 2018 டிசம்பர் தான், இந்த மாதத்தில் ரீடைல் விற்பனையில் சுமார் 3,82,000 கார்கள் விற்பனை செய்யப்பட்டது தான் சாதனை அளவாக இருந்தது, தற்போது டிசம்பர் 2022ல் 4 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்படுகிறது என்பது வியக்க வைக்கும் விஷயமாக உள்ளது.
ஏப்ரல் 1 முதல்
ஏப்ரல் 1 முதல் Real Driving Emission விதிமுறைகள் நடைமுறைக்கு வருகிறது, இதனால் தற்போது நிலுவையில் உள்ள கார்கள் அனைத்தையும் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது ஆட்டோமொபைல் டீலர்களும், ஆட்டோமொபைல் நிறுவனங்களும்.
எஸ்யூவி கார்கள்
2022 டிசம்பர் மாதம் விற்பனை செய்யப்பட்ட 4 லட்சம் கார்களில் எஸ்யூவி கார்கள் விற்பனை தான் அதிகமாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது.
கிராண்ட் விட்டாரா
இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் சமீபத்தில் எஸ்யூவி கார் அறிமுகம் செய்த அனைத்து பிராண்டும் அதிகப்படியான விற்பனையைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாகச் சமீபத்தில் மாருதி சுசூகி அறிமுகம் செய்த கிராண்ட் விட்டாரா மிகப்பெரிய விற்பனை மற்றும் வரவேற்பை பெற்றுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications