டிசம்பர் 31 கடைசி நாள்.. மியூச்சவல் பண்ட், டிமேட் கணக்கு வைத்துள்ளீர்களா.. உஷார்..!

கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை எவ்வளவு திட்டமிட்டு முதலீடு செய்து பல மடங்கு பெருக்கினாலும் அதை முறையாக நிர்வாகம் செய்வது, நம் குடும்பத்திற்குக் கொண்டு சேர்த்தால் தான் அது முழுமை அடையும்.

உதாரணமாக லைப் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும் போது பெரிய தொகையாக இருந்தாலும் சரி, சிறிய தொகையாக இருந்தாலும் சரி, அது பாலிசிதாரர் மரணத்திற்குப் பின்பு சரியான நபருக்கு சேர்ந்தால் மட்டுமே அது முழுமை அடையும்.

டிசம்பர் 31 கடைசி நாள்.. மியூச்சவல் பண்ட், டிமேட் கணக்கு வைத்துள்ளீர்களா.. உஷார்..!

இதை உறுதி செய்யவது தான் நாமினி, அனைத்து நீண்ட காலத் திட்டத்திற்கும், வங்கி கணக்குகளில் இருந்து பங்குச்சந்தை முதலீடுகள் வரையில் நாமினி நியமிப்பத்தைக் கட்டாயமாக்கியுள்ளது ஆர்பிஐ, செபி அமைப்புகள்.

இதன் வாயிலாக வருகிற டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அனைத்து மியூச்சவல் பண்ட் முதலீட்டாளர்கள், டிமேட் கணக்கு வைத்துள்ளவர்கள் செபியின் உத்தரவின் படி நாமினேஷன் நியமிக்கப்பட வேண்டும் அல்லது தனிநபரின் விருப்பத்தின் படி நிமினேஷன்-ஐ நீக்கிக்கொள்ளலாம். எதுவாக இருந்தாலும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும் என்பதைச் செபியின் உத்தரவு.

ஒரு முதலீட்டுக்கு நாமினேஷன் நியமிப்பது என்பது கட்டாயம் என்பதைத் தாண்டி நீங்கள் செய்யுள்ள முதலீட்டை உங்கள் குடும்பத்திற்கு அல்லது நீங்கள் விருப்பப்படும் நபருக்கு எளிதாகச் சொத்துக்களை மாற்றும் ஒரு முறை தான் நாமினேஷன், இதைச் செய்யாவிடில் சொத்துகளையும், முதலீட்டையும் மாற்றுவது மிகவும் கடினமாகும்.

இது நீங்கள் இல்லாத தருணத்தில் உங்கள் குடும்பத்திற்கும் பெரும் இன்னல்களைக் கொடுக்கும், இதில் இருந்து விடுப்படவே செமி, ஆர்பிஐ அனைத்து நிதி முதலீட்டுக்கும், சேமிப்புக்கும் சரியான முறையில் நாமினேஷன் நியமிக்கக் கட்டாயப்படுத்தியுள்ளது.

நாமினேஷன் செய்யாவிட்டால் என்ன ஆகும் என்பது அடுத்த முக்கியமான கேள்வி, தற்போது செபி அமைப்பு டிமேட் கணக்குகள் மற்றும் மியூச்சவல் பண்ட் திட்டத்திற்கு நாமினேஷன் நியமிப்பதை டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் செய்ய உத்தரவிட்டு உள்ளது.

டிசம்பர் 31 கடைசி நாள்.. மியூச்சவல் பண்ட், டிமேட் கணக்கு வைத்துள்ளீர்களா.. உஷார்..!

இதைச் செய்யாத பட்சத்தில் செபி உங்கள் மியூச்சவல் பண்ட் மற்றும் டிமேட் கணக்குகளை freeze செய்ய வாய்ப்பு உள்ளது, இதனால் பணத்தை வித்டிரா செய்ய முடியாது. உதாரணமாக மியூச்சவல் பண்ட் திட்டத்தில் இருந்து பணத்தை எடுக்கவோ அல்லது டிமேட் கணக்கைப் பங்குகளை வாங்கவோ அல்லது விற்கவோ முடியாது.

இதனால் உங்கள் பணம் மொத்தமாக முடங்கிவிடும் அபாயம் இதில் உள்ளது. செபி அமைப்பு இதற்கான முதல் அறிவிப்பை ஜூன் 2022ல் அதன் பின்பு பல முறை இதற்கான காலகட்டத்தை நீட்டிப்புச் செய்து தற்போது டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி நாளாக உள்ளது. மறந்துவிடாதீர்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+