நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த முறை திங்கட்கிழமை நாளில் தீபாவளி பண்டிகை வந்ததால் பொதுமக்கள் சனி ,ஞாயிறு , திங்கள் ஆகிய மூன்று நாட்களும் பண்டிகையை கொண்டாட கூடிய வாய்ப்பு கிடைத்தது .
தமிழ்நாடு அரசு செவ்வாய்க்கிழமையும் அரசு பொது விடுமுறையாக அறிவிப்பு வெளியிட்டதால் தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் என்பது நான்கு நாட்களாக விரிவடைந்தது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர் . அனைவரும் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.

இந்த தீபாவளி பண்டிகை தமிழ்நாடு அரசுக்கு பெரிய அளவிலான வருவாயும் ஈட்டி தந்திருக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை களைகட்டி இருக்கிறது. தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய இரண்டு நாட்கள் என மூன்று நாட்களில் மட்டும் சுமார் 790 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனம் 4,787 கடைகள் வாயிலாக பல்வேறு வகையான மதுபானங்களை விற்பனை செய்கிறது. இந்த கடைகளில் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் , பண்டிகை காலம் வந்து விட்டாலே அதிக அளவு மதுபானங்கள் விற்பனையாகும். இந்த முறை தீபாவளி பண்டிகையொட்டி விற்பனை பெருமளவில் களைகட்டி இருக்கிறது.
ஜிஎஸ்டி வரி குறைப்பு , போனஸ் கிடைத்தது என மக்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரித்ததால் குடிமகன்கள் தீபாவளியை மிக உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர். சனிக்கிழமை தொடங்கி ஞாயிறு , திங்கள் ஆகிய மூன்று நாட்களிலும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபான விற்பனை தீவிரமடைந்திருக்கிறது. சனிக்கிழமை 18ஆம் தேதியிலிருந்து மதுபான விற்பனை சூடுபிடிக்க தொடங்கியது அன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 230.66 கோடி ரூபாய்க்கு மதுபான விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அடுத்ததாக 19ஆம் தேதி அன்று 293.73 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளில் 256 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது . இந்த மூன்று நாட்களில் மட்டும் மொத்தமாக 789.85 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக மதுரையில் தான் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. 171 கோடி ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன .அடுத்ததாக சென்னை மண்டலத்தின் 158 கோடி ரூபாய்க்கும் திருச்சியில் 157 கோடி ரூபாய்க்கும் கோவையில் 150 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது தமிழ்நாட்டில் மதுபான விற்பனையின் மதிப்பு 650 கோடி ரூபாயாக இருந்தது இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக 140 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications