இந்தியாவின் பிரபல நட்சத்திர தம்பதிகளான ரன்வீர் சிங் - திபிகா படுகோன் ஜோடி மும்பை பாந்த்ராவில் 119 கோடி ரூபாம் மதிப்பில் குவாட்ரப்ளக்ஸ் அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியுள்ளனர்.
119 கோடி ரூபாய்க்கு வீடா, பலரும் வாழ் நாளில் நினைத்து பார்த்திராத இந்த வீட்டில், அப்படி என்ன ஸ்பெஷல்? வாருங்கள் பார்க்கலாம்.
நாட்டில் விலையுயர்ந்த குடியிருப்பு
பிரபல பாலிவுட் ஜோடியான தீபிகாவும், ரன்வீரும் மும்பையின் பாந்த்ரா பகுதியில் இந்த விலையுயர்ந்த சொகுசு வீட்டினை வாங்கியுள்ளனர். இந்த அபார்ட்மெண்ட் நாட்டின் மிகப்பெரிய விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்று என்று கூறப்படுகிறது.
அண்டை வீட்டுக் காரர்கள் யார் தெரியுமா?
இந்த அபார்ட்மெண்ட் சல்மான்கானின் கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்புக்கும், ஷாருக்கானின் மன்னத் பங்களாவுக்கும் இடையில் இருக்கும் என கூறப்படுகிறது.
இதன் மூலம் இவர்கள் விரைவில் மற்ற பிரபல நடிகர்களான ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் வீட்டின் அருகில் குடியேறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அபார்ட்மெண்ட்டின் பரப்பளவு
இந்த அபார்ட்மெண்ட் 16வது மாடி, 17வது, 18 மற்றும் 19வது மாடிகளை இணைத்து, கட்டப்படுவதாகவும், இதன் மொத்த பரப்பளவும் 11,266 சதுர அடி கார்பெட் பரப்பளவும், 1300 சதுர அடி மொட்டை மாடியையும் கொண்டுள்ளது. இதன் 1 சதுர அடியின் விலை 1 லட்சம் ரூபாயாகும். இதற்கு பதிவு கட்டணம் மட்டும் 7.13 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பார்க்கிங் ஏரியாவில் வாகனத்தை நிறுத்த மட்டும் 19 வாகனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிக சம்பளம் வாங்கும் நடிகர்
ரன்வீர் சிங் 2010ல் அறிமுகமானதை தொடர்ந்து, ஹிந்தி திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக உள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் சந்தையான மும்பையில், 2020ம் ஆண்டு மாநில அரசு வரையறுக்கப்பட்ட முத்திரை தாள் கட்டண குறைப்புக்கு பிறகு, பெரியளவிலான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
காஸ்ட்லி ரியல் எஸ்டேட் சந்தை
மும்பை நகரத்தில் இந்த பகுதியில் பல பெரிய ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள், சமீபத்திய காலமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் அயனாக்ஸ் குழுமத்தின் சித்தார்த் ஜெயின், மும்பையின் லோகேளிட்டியான வொர்லியில் உள்ள டாக்டர் அன்னி பெசன்ட் சாலையில் உள்ள ஒரு சூப்பர் பிரீமியம் குடியிருப்பில் உள்ள குவாட்ரப்ளக்ஸ் அடுக்குமாடியினை 144 கோடி ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
கடலை ரசிக்கலாம்
தீபிகா - ரன்வீரின் இந்த சொகுசு வீட்டில் இருந்து அரபிக் கடலை கண்டுகளிக்க முடியும் என்பது மற்றொரு தனிச் சிறப்பு.
மும்பையில் ரியல் எஸ்டேட் மதிப்பானது அதிகரித்து வரும் நிலையில், தற்போது வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது. எனினும் முத்திரை தாள் கட்டணம் குறைவாக உள்ளது.
சொத்து பதிவு அதிகரிப்பு
மும்பை கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 9,919 சொத்துகளை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 26% அதிகமாகும். இது ஜூன் மாதத்திற்கான ஒப்பந்தங்களின் எண்ணிக்கை மற்றும் 733 கோடி ரூபாய் வரி என்பதிலும் புதிய உச்சத்தினை எட்டியுள்ளது.
More From GoodReturns

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

ரியல் எஸ்டேட்டில் பணத்தை கொட்டிய Dhurandhar நாயகன் மாதவன்.. சும்மாயில்ல பாஸ் ரூ.125 கோடி சொத்து மதிப்பு..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?



Click it and Unblock the Notifications