ரூ.43,000 கோடி செலவில் 6 நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பு.. பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒப்புதல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் கப்பல் படையை மேம்படுத்தும் வகையில் புதிதாக 6 நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 6 நீர்மூழ்கிக் கப்பல்களைச் சுமார் 43,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டத்தைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகிக்கும் டிபென்ஸ் அக்வசிஷன் கவுன்சில் (DAC) ஒப்புதல் அளித்துள்ளதன் வாயிலாகத் தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

ரூ.43,000 கோடி செலவில் 6 நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பு.. பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒப்புதல்..!

இந்த 6 நீர்மூழ்கிக் கப்பல்களையும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பி-75 இந்தியா என்ற பெயரில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கத் தேவையான தரவுகள் அடங்கிய Request for Proposal (RFP) அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.

மேலும் இந்த 6 நீர்மூழ்கிக் கப்பல்களில் என்ன இருக்கும், எப்படி இருக்கும், தேவையானவை என்ன என்பதை இந்தியக் கடற்படையும், பாதுகாப்பு அமைச்சகமும் தீர்மானிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய பாதுகாப்புத் துறையின் இந்த முடிவு இந்தியச் சீன எல்லை பிரச்சனைக்கு எடுக்கப்படு உள்ளதாலும், நாட்டில் கொரோனா தொற்று மிகவும் மோசமாக இருக்கும் வேளையில் 43,000 கோடி ரூபாய் அளவிலான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது இதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Defence Ministry to Build 6 submarines worth Rs 43,000 crore for Indian Navy

Defence Ministry to Build 6 submarines worth Rs 43,000 crore for Indian Navy
Story first published: Friday, June 4, 2021, 19:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X