மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பாதுகாப்புத் துறை பங்குகள் முதலீட்டாளர்களின் கவனத்தை பெற்றுள்ளன. சந்தை வட்டாரங்களின்படி, பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு ஆண்டு 8 முதல் 10 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025ஆம் ஆண்டில் பஹல்காமில் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பயங்கரவாத முகாம்களை அழித்தது. எல்லையில் எப்போதுமே பாகிஸ்தானும், சீனாவும் இந்தியாவுக்கு குடைச்சல் தந்து கொண்டே இருக்கின்றன. எனவே பாதுகாப்பு துறைக்கு இந்த முறையும் அதிக ஒதுக்கீடு இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்தியா பாதுகாப்பு துறைக்கான ஆயுதங்களை எல்லாம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதால் இந்த பட்ஜெட்டில் பாதுகாப்பு துறை ஒதுக்கீடு என்பது இத்துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளை உயர செய்யும். பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்களில், வலுவான ஆர்டர் புத்தகங்கள் மற்றும் செயல்பாட்டுத் தெளிவு கொண்ட நிறுவனங்கள் பட்ஜெட் காலத்தில் முதன்மை கவனம் பெறும். இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் (HAL) விமான, எஞ்சின் உற்பத்தித் திட்டங்களாலும், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) பாதுகாப்பு மின்னணுவியல், ரேடார் அமைப்புகளாலும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஏவுகணை உற்பத்தியில் பாரத் டைனமிக்ஸ் (BDL) முதலீட்டாளர்களின் கண்காணிப்பில் உள்ளது.
கடற்படை நவீனமயமாக்கல் பணிகளின் காரணமாக மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் மற்றும் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் போன்ற கப்பல் கட்டும் நிறுவனங்களும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன. உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிப்பு தொடர்வதால், லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) பெரிய தளங்கள் மற்றும் அமைப்புகள் ஒருங்கிணைப்புத் திட்டங்களின் முக்கியப் பயனாளி. பாரத் ஃபோர்ஜ், டேட்டா பேட்டர்ன்ஸ், அஸ்ட்ரா மைக்ரோவேவ் போன்ற தனியார் நிறுவனங்கள் பாகங்கள், மின்னணுவியல் மற்றும் துணை அமைப்புகளின் உள்ளூர்மயமாக்கலால் லாபம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலதனச் செலவினத்தில் கவனம் செலுத்துவதும், உள்நாட்டு மூலப்பொருட்கள் கொள்முதலுக்கு முன்னுரிமை அளிப்பதும் தொடரும். மிராய் அசெட் ஷேர்கான் நிறுவனத்தின் அடிப்படை ஆராய்ச்சி துணைத் தலைவர் அன்கித் சோனி, "ட்ரோன்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், பாதுகாப்பு மின்னணுவியல் மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் கூடுதல் ஒதுக்கீடுகளால் பாதுகாப்புத் துறைக்குச் சிறந்த எதிர்காலம் அமையும் என சந்தை எதிர்பார்க்கிறது" என்று குறிப்பிட்டார்.
ஏற்கனவே பங்கு விலைகளில் பெரும்பாலான நேர்மறை எதிர்பார்ப்புகள் பிரதிபலித்துள்ளதால், பட்ஜெட்டின் தாக்கம் துறை முழுவதும் அல்லாமல், குறிப்பிட்ட பங்குகளைச் சார்ந்தே இருக்கும் என புரோக்கரேஜ் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. தெளிவான செயல்பாட்டு காலக்கெடு, வலுவான பணப்புழக்கம் மற்றும் நீண்ட கால வருவாய் தென்படும் நிலை கொண்ட நிறுவனங்களை முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வாய்ப்புள்ளது.
பாதுகாப்புத் துறை உற்பத்தி வளர்ச்சியை நிலைநிறுத்துவதற்கான அரசாங்கத்தின் கொள்கைத் தொடர்ச்சி மற்றும் உறுதிப்பாட்டை உணர்த்தும் சிக்னல்களுக்காக மத்திய பட்ஜெட் 2026 உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும். முதலீட்டாளர்கள் , பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனங்களை தேர்வு செய்யும் முன்பு பட்ஜெட் அறிவிப்பை மட்டும் கணக்கில் கொள்ளாமல் நிறுவனத்தின் தகவல்களையும் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications