இந்தியாவில் பாதுகாப்புத் துறை சார்ந்த உற்பத்தி மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது, இதேபோல் பல இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் உடன் கூட்டணி சேர்ந்து துப்பாக்கி முதல் நீர்மூழ்கிக் கப்பல் வரையில் தயாரிக்கும் பணிகளைச் செய்து வருகிறது. இதன் வாயிலாகப் பாதுகாப்புத் துறை சார்ந்த ஏற்றுமதிக்கு புதிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
தற்போது கல்யாணி ஸ்ட்ரேடஜிக் சிஸ்டம்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் உள்ளிட்ட இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் தங்களது ராணுவ தளங்களைப் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு விற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவை எதிர்கொள்ளத் தயாராகி வரும் வேளையில் பிலிப்பைன்ஸ் தனது ராணுவத்தைச் சீரமைத்து வருகிறது, சமீபத்தில் இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையை வாங்கியது குறிப்பிடத்தக்கது. 2022 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் மத்தியில் 375 மில்லியன் டாலர் மதிப்புடைய மூன்று பிரம்மோஸ் பேட்டரிகளை வழங்க பிலிப்பைன்ஸ் - இந்தியா உடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் பாதுகாப்பு உபகரணங்கள் முதல் போர் விமானங்கள் வரையிலான அமைப்புகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. HAL நிறுவனத்தின் தலைவர் சிபி அனந்தகிருஷ்ணன் கூறுகையில் நைஜீரியா, பிலிப்பைன்ஸ், எகிப்து ஆகியவை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் லைட் காம்பேக்ட் விமானங்களை வாங்குவதற்கு ஆர்வமாக உள்ளது எனத் தெரிவித்தார்.
இதன் மூலம் 2024-25 ஆம் நிதியாண்டுக்குள் இந்தியாவின் வருடாந்திர பாதுகாப்புத் துறை ஏற்றுமதி அளவு 5 பில்லியன் டாலர் அளவீட்டை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வெளிநாட்டு நிறுவனங்கள் உடன் இந்திய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பல்வேறு ராணுவ உபகரணங்களை இந்திய ராணுவம் வாங்குவதால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது குறைக்கப்பட்டு, டாலர் இருப்பும் தக்கவைக்கப்பட்டு உள்ளது.
ஒரு காலத்தில் முப்படைகளுக்கும் தேவையான ஆயுதங்களை வெளிநாட்டில் இருந்து மட்டுமே வாங்கும் நிலையில் இருந்து, தற்போது ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியா மாறியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications