டெல்லி: நாட்டிலேயே முதன்முறையாக டெல்லி விமான நிலையத்தில் மூன்று டெர்மினல்களை இணைக்கும் வகையில் ரயில் சேவை அதாவது ஏர் டிரெய்ன் (air train or automated people mover (APM)) சேவை கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2027 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த ரயில் போக்குவரத்து தொடங்கும்.
இந்த ரயில் சேவை மூலம் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல்கள் 3, 2 மற்றும் 1 ஆகியவற்றுக்கு இடையிலான பயணம் எளிதாகிவிடும் என சொல்லப்படுகிறது. இதற்காக டெல்லி சர்வதேச விமான நிலைய நிர்வாகம், விமான நிலையத்திற்குள் ரயில் போக்குவரத்தை நிறுவுவதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோரியுள்ளது.

இந்த ஒப்பந்த புள்ளியில் குறிப்பிட்டுள்ள தகவலின் படி, இந்த ஏர் டிரெய்ன் சேவை நான்கு நிறுத்தங்களை கொண்டிருக்கும். டெர்மினல் 1, டெர்மினல் 2 / டெர்மினல் 3, ஏரோ சிட்டி மற்றும் கார்கோ சிட்டி ஆகியவற்றை இணைக்கும் வகையில் நான்கு ரயில் நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதற்காக 7.7 கிலோமீட்டர் தொலைவிலான வழித்தடத்தை கண்டறிந்துள்ளதாக டெல்லி சர்வதேச விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ரயில் சேவை பயன்பாட்டுக்கு வரும்போது டெர்மினல்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து என்பது நிறுத்தப்படும்.
டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்த ஒப்பந்த புள்ளிகளை கோரும் பணி அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் முடிவடையும் என தெரிகிறது. நவம்பர் மாதத்தில் விமான நிலைய நிர்வாகம், விமான நிலையத்தினுள் முதல் ரயில் போக்குவரத்து சேவையை அமைக்க இருக்கும் நிறுவனத்தை இறுதி செய்ய இருக்கிறது.
நடப்பாண்டு இறுதிக்குள்ளாகவே பணி ஒப்பந்தத்தை வழங்குவதற்கு விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஒப்பந்தம் பெற்று பணிகள் தொடங்கினால் 2027 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த விமான நிலையத்திற்குள் ரயில் சேவை அமலுக்கு வரும்.
இந்த ரயில் சேவை அமலுக்கு வந்து விட்டால் பயணிகள் டெல்லி விமான நிலையத்தில் மூன்று முனையங்களுக்கு இடையே எளிதாகவும் வேகமாகவும் பயணிக்க முடியும்.
இந்தியாவிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் இருக்கிறது. இங்கு ஒரு ஆண்டில் சுமார் 7 கோடி பயணிகள் வந்து செல்கின்றனர். அடுத்த 6 முதல் 8 ஆண்டுகளில் இது 13 கோடியாக அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இத்தனை பயணிகளும் விரைவாக விமான நிலையத்துக்குள் பயணிக்க ஏதுவாக இந்த ரயில் சேவை கொண்டு வரப்பட இருக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications