ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர் அல்லது நிர்வாக அதிகாரி வேலையை விட்டு நீக்கப்பட்டால், அவர்கள் வைத்திருக்கும் நிறுவனத்தின் அனைத்துப் பொருட்களையும் (மடிக்கணினி, அலுவலகத் தொலைபேசி, முக்கிய ஆவணங்கள், கார் போன்றவை) உடனடியாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நிறுவனத்தின் பொருட்களைச் சரியான நேரத்தில் திருப்பித் தராமல் தாமதப்படுத்தினால் அல்லது வேண்டுமென்றே வைத்திருந்தால், அது நிறுவனச் சட்டம் 2013-இன் பிரிவு 452-இன் கீழ் ஒரு கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
நடந்தது என்ன..?:முன்னாள் நிர்வாக இயக்குநர் (MD) திருமதி. கட்டர் என்பவர், வேலை இழந்த பிறகும் கூட நிறுவனத்தின் சொத்துக்களை திருப்பிக் கொடுக்காமல் வைத்திருந்தார். இதனால், அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், அவர் மீது தொடுக்கப்பட்ட குற்றவியல் வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

விசாரணையின்போது, கட்டர் நிர்வாக இயக்குநராக இருந்ததால் மட்டுமே அவருக்கு அந்தப் பொருட்கள் வழங்கப்பட்டதாகவும், அவர் பதவியில் இருந்து ஏப்ரல் 11, 2016 அன்று நீக்கப்பட்டவுடனே, அன்றைய தினமே அந்தப் பொருட்களைத் திருப்பிக் கொடுக்கும்படி மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாகவும் நிறுவனம் நீதிமன்றத்தில் கூறியது.
நீதிமன்றமும் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டது. "வேலையில் இருந்து நீக்கப்பட்ட தகவல் கிடைத்தவுடனே, அந்தப் பொருட்களைத் திருப்பிக் கொடுத்திருக்க வேண்டும். நிறுவனத்தின் சொத்துக்களைத் தவறாக வைத்திருப்பது குற்றம். அதனால், இவர் மீது தொடரப்பட்ட வழக்கை இப்போதே ரத்து செய்ய முடியாது. இந்த வழக்கில் மேலோட்டமாகப் பார்த்தாலே குற்றம் நடந்திருக்கிறது என்று தெரிகிறது. எனவே, இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடக்கும்" என்று கூறி, திருமதி. கட்டர் போட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஊழியர்கள் கட்டாயம் அறிய வேண்டிய 5 பாடங்கள் : இந்தத் தீர்ப்பின் மூலம் வேலை செய்யும் ஊழியர்களுக்குக் கிடைக்கும் மிக முக்கியமான எச்சரிக்கை மற்றும் பாடங்களை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி.ஸ்ரவந்த ஷங்கர் விளக்கியுள்ளார்.
உடனடி ஒப்படைப்பு அவசியம் : வேலை விலகல் அல்லது நீக்கத்திற்குப் பிறகு கார், மடிக்கணினி, வாடிக்கையாளர் தகவல்கள், முக்கிய ஆவணங்கள் போன்ற நிறுவனச் சொத்துகளைத் தாமதப்படுத்தாமல் உடனே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்.
கிரிமினல் வழக்கு : நிறுவனச் சொத்துக்களைத் திருப்பிக் கொடுக்காமல் தாமதித்தால், அது பிரிவு 452-இன் கீழ் குற்றமாகும். இது ஒரு கிரிமினல் வழக்காக மாறும்.
உயர் பதவியால் விதிவிலக்கு இல்லை : நீங்கள் நிர்வாக இயக்குநராகவோ அல்லது வேறு எந்த உயர் பதவியிலோ இருந்தாலும், வேலை நீங்கியவுடன் நிறுவனம் கொடுத்த பொருட்களுக்கு நீங்கள் பொறுப்பல்ல. உங்கள் கையில் அவை இருப்பது சட்டவிரோதமாகும்.
உள்நோக்கம் தேவையில்லை : இந்தப் பிரிவு 452-இன் கீழ், நீங்கள் திருட வேண்டும் என்ற உள்நோக்கம் இருந்ததா என்று பார்க்க வேண்டியதில்லை. நிறுவனத்தின் சொத்துக்களைத் தவறான முறையில் நீங்கள் வைத்திருந்தாலே தண்டனைக்கு உரியவராவீர்கள்.
ஒப்புதல் ரசீது முக்கியம் : வேலையை விட்டு விலகும்போதோ அல்லது நீக்கப்படும்போதோ, நிறுவனப் பொருட்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டதற்கு அடையாளமாக, கட்டாயம் எழுத்துப்பூர்வமான ஒரு ரசீதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இது எதிர்காலத்தில் சட்டச் சிக்கல்களில் இருந்து உங்களைக் காப்பாற்றும்.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, பணிபுரியும் ஊழியர்கள் நிறுவன சொத்துக்களைக் கையாள்வதில் இனி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அழுத்தமாக உணர்த்துகிறது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications