கொரோனா தொற்றுக்குப் பின்பு இந்தியா மட்டும் இல்லாமல் உலகளாவிய விமானப் போக்குவர்த்து சேவையில் மிகப்பெரிய மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய தலைநகர் டெல்லி விமான நிலையத்திற்குப் புதிய மகுடம் கிடைத்துள்ளது.
டெல்லி விமான நிலையம்
மார்ச் மாதத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களைக் கையாளும் எண்ணிக்கை அடிப்படையில் டெல்லி விமான நிலையம் உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையம் என்று உலகளாவிய பயணத் தரவு வழங்குநரான அபிசியல் ஏர்லைன் கைய்டு (OAG) வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அட்லாண்டா
மேலும் அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையம் மார்ச் மாதமும் தொடர்ந்து தனது முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் கடந்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் மூன்றாவது இடத்தில் இருந்த டெல்லி விமான நிலையம், மார்ச் மாதத்தில் துபாய் விமான நிலையத்தை 3வது இடத்திற்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்றுக்கு முன்பு டெல்லி விமான நிலையம் மார்ச் 2019 இல் 23வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாத நிலவரத்தின் படி அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா விமான நிலையம் 4.42 மில்லியன் பயணிகளையும், இந்தியாவில் டெல்லி விமான நிலையம் 3.61 மில்லியன் பயணிகளையும் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் விமான நிலையங்கள் 3.55 மில்லியன் பயணிகளை(இருக்கைகள்) கையாண்டு உள்ளது.
பயணக் கட்டுப்பாடுகள்
COVID-19 தொற்றுநோய் உலகை கடுமையாகப் பாதித்தது. பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகப் பயணம் மற்றும் சுற்றுலாத் துறைகளை மோசமாகப் பாதித்தன. குறிப்பாக வெளிநாட்டு விமானச் சேவைகளுக்குக் கடுமையான தடை விதிக்கப்பட்டு வான்வழி எல்லை அனுமதி முடக்கப்பட்டன.
தடுப்பூசி பாதுகாப்பு
ஆனால் இப்போது, உலகம் முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், உலக நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வெளிநாட்டு விமானச் சேவைகளுக்கு அனுமதி வழங்குவதாலும் விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
விமானப் பயணிகள்
மேலும் இந்தியாவில் விமானப் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், எரிபொருள் விலை உயர்வால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இதனால் முதல் முறை விமானப் பயணம் செய்யும் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ளது.
More From GoodReturns

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

துபாய் வாழ் இந்தியர்களுக்கு வாட்ஸ் அப்பில் லிங்க் அனுப்பி பதிவு செய்ய சொல்கிறதா இந்திய தூதரகம்? உண்மை என்ன?

துபாயில் சிக்கிதவிக்கும் மக்களுக்கு குட்நியூஸ்.. தாய் நாட்டுக்கு கிளம்ப ரெடியாக இருங்க..!!

துபாயில் சிக்கிதவிக்கும் பிரலங்கள்.. அமைச்சர் முதல் அஜித் குமார், நர்கிஸ் ஃபக்ரி வரை.. பெரிய லிஸ்ட் இருக்கு

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

துபாயில் இருக்கும் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ஏர்போர்ட் புறப்படும் முன் இதை செய்ய வேண்டும்!!

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

ஈரான் தாக்குதல்: மொத்தமாக முடங்கிய UAE.. பங்குச் சந்தைகள், IT நிறுவனங்கள், பள்ளிகள் மூடல்..!



Click it and Unblock the Notifications