பெங்களூரு: தைவான் நாட்டை சேர்ந்த டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய செயல்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தற்போது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை 3,000இல் இருந்து 6,000ஆக உயர்த்துவது என முடிவு செய்துள்ளது. டெல்டா எலக்ட்ரானிக்ஸ் ஓசூரில் மிகப்பெரிய தொழிற்சாலைகளை வைத்துக்கொண்டு இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
தைவானை சேர்ந்த டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியாவில் இருக்கும் தங்களுடைய ஊழியர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்துவது என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அண்மையில் தான் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பெங்களூருவில் தங்களுடைய மிகப்பெரிய ஆய்வு மையத்தை நிறுவியது.

இதன் மூலம் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த புதிய ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையம் இந்தியாவில் தங்களுடைய செயல்பாடுகளை மேற்கொண்டு விரிவாக்கம் செய்வதற்கு உதவியாக இருக்கும் என டெல்டா எலக்ட்ரானிக்ஸ் கூறுகிறது.
இந்த நிறுவனம் கூடிய விரைவில் இந்தியாவில் 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 2015 -16ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் தங்களுடைய நிறுவனத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்வது என முடிவு செய்திருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக அது தடைப்பட்டது. தற்போதைய சூழலில் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவின் மூன்று இடங்களில் தன்னுடைய ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையங்களை நிறுவியுள்ளது.
தற்போது இதன் தலைமையகம் குருகுராமில் அமைந்திருக்கும் நிலையில் கூடிய விரைவில் இது பெங்களூருக்கு மாற்றப்படும் என தெரிகிறது. டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் உற்பத்தி ஆலைகளை செயல்படுத்தி வருகிறது. எனவே இதற்கு அருகிலேயே தங்களுடைய ஆய்வு மையமும் தலைமையகமும் இருக்க வேண்டும் என இந்த நிறுவனம் கருதுகிறது. பெங்களூரு இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படுகிறது.
பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்களின் மையமாக பெங்களூரு திகழ்ந்து வருகிறது. எனவே டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பெங்களூருவில் தங்களுடைய ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவுவதன் மூலம் அதிக திறன் கொண்ட ஊழியர்கள் தங்களுக்கு பணிக்கு கிடைப்பார்கள் என்றும் இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் 118 global capability centreகளை நிறுவியுள்ளன. இதன் மூலம் இந்தியாவில் தற்போது செயல்பட்டு வரும் global capability centreகளின் எண்ணிக்கை 1660 என உயர்ந்துள்ளது. இது 2030ஆம் ஆண்டுக்குள் இன்னும் அதிகரித்து நாட்டின் ஜிடிபியில் சுமார் 2 சதவீதம் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

பெங்களூரில் தண்ணீர் சப்ளை கட்.. மக்களுக்கு திண்டாட்டம் தான்..!

நச்சுன்னு நாலு திட்டம்.. விஸ்வரூபம் எடுக்கும் கர்நாடக..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?



Click it and Unblock the Notifications