இந்தியாவில் பெரிய வீடுகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டின் முதல் பாதியில், அதாவது ஜனவரி முதல் ஜூன் வரையிலான மாதங்களில் குறைந்தது 51 சதவீதம் பேர் 3 BHK வீடுகளையும் மற்ற 39 சதவீதம் பேர் 2 BHK வீடுகளையும் தேர்ந்தெடுத்ததாக திங்களன்று வெளியான ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Anarock-FICCI நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, பிரீமியம் மற்றும் லக்சரி வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஏனெனில் 28 சதவீதம் பேர் இப்போது ரூ.90 லட்சம் ரூபாய் முதல் ரூ 1.5 கோடி வரை விலையுள்ள வீடுகளை விரும்புகின்றனர். இது கோவிட் தொற்றுநோய் காலத்திற்கு முன்பு 18 சதவீதமாக இருந்தது.

கோவிட் 19 தொற்று நோய்க்குப் பிறகு மலிவு விலை வீடுகளுக்கான தேவை குறைந்து வருகிறது. ஆரம்பத்தில் இந்தப் பிரிவில் தொற்றுநோய் காரணமாக நிதி ரீதியாக பாதிக்கப்பட்ட ஏராளமான வாடிக்கையாளர்கள் இருந்தனர். ஆனால் இப்போது இந்த பிரிவின் கீழ் வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
அதேபோல கணக்கெடுப்பில் குறைந்தபட்சம் 53 சதவீத வீடு வாங்குபவர்கள் முக்கியமான நகரங்களில் கிடைக்கக்கூடிய மலிவு விலை வீடுகள் குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
"எங்கள் ஆய்வில் கலந்து கொண்ட அதிருப்தியடைந்த மலிவு விலையிலான வீடு தேடுபவர்களில், 92% பேர் வீட்டின் இருப்பிடத்தை மிகப்பெரிய குறைபாடு என்று அடையாளம் கண்டுள்ளனர். அதே நேரத்தில் 84% பேர் குறைந்த கட்டுமான தரம் மற்றும் வடிவமைப்பு கூறுகளை முக்கிய தடையாகக் குறிப்பிடுகின்றனர். சுமார் 68% பேர் மலிவு விலை வீடுகளுக்கான அளவு மிகச் சிறிய அளவில் உள்ளதாக கருதுகின்றனர்", என்று அனராக் குழுமத்தின் தலைவர் அனுஜ் பூரி கூறினார்.
கடந்த 1 வருடத்தில் ரியல் எஸ்டேட் விலை தொடர்ந்து அதிகரித்திருந்தாலும் பெரிய அளவிலான வீடுகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 3 BHK வீடுகளுக்கான தேவை குறிப்பாக சென்னை, ஹைதராபாத், டெல்லி என்சிஆர் மற்றும் பெங்களூரில் அதிகமாக இருப்பதாக நகரவாரியான பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது. கணக்கெடுப்பில் கலந்து கொண்ட 50 சதவீதத்திற்கு அதிகமானோர் மற்ற பிளாட்டுகளை விட பெரிய அளவிலான வீடுகளை அதிகம் விரும்புவதாகவும் பதில் அளித்துள்ளனர். மாறாக, கொல்கத்தா, மும்பை மற்றும் புனேவில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் 2BHK வீடுகள் தங்களுக்கு விருப்பமாக உள்ளதாகக் கூறியுள்ளனர்.
2024-ஆம் ஆண்டின் முதல் பாதியில் குடியேறுவதற்கு தயாராக இருக்கக்கூடிய வீடுகளின் தேவை விகிதம் 20:25 ஆக உள்ளது. இது 2020-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 46:18 ஆக இருந்தது. இந்த மாற்றத்திற்கான ஒரு முக்கிய காரணம் பெரும்பாலான வீடு வாங்குபவர்கள் பிரபல டெவலப்பர்களின் திட்டங்களையே விரும்புகின்றனர். இவர்கள் சரியான நேரத்தில் தங்களுடைய வீடுகளை குடியேற ஒப்படைப்பார்கள் என்றும் மக்கள் நம்புவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications