பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வாங்குவதற்கு சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எஃப் ஒப்புதல் அளித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா ஆபரெஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலை இந்தியா தன்னுடைய வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி முறியடித்து வருகிறது. பாகிஸ்தானிலும் பிரதான நகரங்களில் எல்லாம் இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பாகிஸ்தான் அரசு சர்வதேச நாணயத்திடம் கடன் கேட்டிருந்தது. சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.
ஐஎம்எஃப் அதிகாரிகள் நடத்திய கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதற்கான மதிப்பாய்வு நடந்தது. இதனை அடுத்து வாக்கெடுப்பும் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. மேலும் ஐஎம்எஃபின் கடன் பணத்தை பாகிஸ்தான் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாக இந்தியா குற்றச்சாட்டை முன்வைத்தது.
இந்த சூழலில் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்குவதற்கு ஐஎம்எஃப் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஐஎம்எஃப் இதுவரை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ள கடன் தொகை 2.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவியை வழங்கியுள்ளது. நிதி உதவி தவிர்த்து பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுப்பதற்கான திட்டத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு கூடுதலாக 1.4 பில்லியன் டாலர்கள் நிதி வழங்குவது தொடர்பாகவும் ஐஎம்எஃப் பரிசீலனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையானது பருவநிலை மாற்றங்களால் பாகிஸ்தானில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கும் மேக்ரோ பொருளாதார நிலை தன்மைக்கும் பயன்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது.
இதனிடையே பாகிஸ்தானில் பொருளாதாரம் மேம்பட்டு வருவதாகவும் பணவீக்கம் சற்றே குறைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 2025 ஏப்ரலில் பாகிஸ்தானில் பணவீக்க விகிதம் 0.3 சதவீதம் குறைந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானில் வெளிநாட்டு கரன்சி கையிருப்பு 9.4 பில்லியன் டாலர்களாக இருந்து, இந்த ஆண்டு ஏப்ரலில் 10.3 மில்லியன் டாலர்களாக அதிகரித்திருக்கிறது. ஜூன் மாதத்திற்குள் இந்த வெளிநாட்டு கரன்சிகளின் கையிருப்பு அளவு 13.9 மில்லியன் டாலர்களாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைக்கு பாகிஸ்தான் 131 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனை வைத்திருக்கிறது.
More From GoodReturns

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications