ரூ.2 லட்சம் வரையிலான நகை கடன்களுக்கு கட்டுப்பாடுகளை தளர்த்தலாம்- ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை..

இந்தியாவில் சாமானிய மக்களுக்கு ஒரு பண தேவை என்றால் உடனடியாக அவர்கள் நாடக்கூடிய ஒரு விஷயம் தங்க நகைக்கடன் தான். தங்கள் வீட்டில் இருக்கும் நகையை வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் வைத்து அடகு வைத்து கடன் வாங்கி பின்னர் அதனை மீட்டுக் கொள்வார்கள்.

ஆனால் இவ்வாறு நகை கடன் பெறுவதில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்த வண்ணம் இருப்பதாக கூறி இந்திய ரிசர்வ் வங்கி நகை கடன் கொள்கையில் சில மாற்றங்களை கொண்டு வர உள்ளது. இதன்படி நகை கடன் வழங்கும் விதிமுறைகள் கடுமையாக்கப்பட உள்ளன. இதனால் நகை கடன் வழங்குவதில் தாமதமாகும் என வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

ரூ.2 லட்சம் வரையிலான நகை கடன்களுக்கு கட்டுப்பாடுகளை தளர்த்தலாம்- ஆர்பிஐக்கு மத்திய அரசு பரிந்துரை..

நகை கடன் விதிகளை கடுமையாக்கினால் சாமானிய மக்கள் தங்க நகை கடன் வாங்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் பலரும் கூறி வருகின்றனர். ரிசர்வ் வங்கி இந்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் தான் ரிசர்வ் வங்கியின் தங்க நகை கடன் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய நிதி அமைச்சகம் ஆய்வு செய்திருக்கிறது.

இதனை அடுத்து சிறு நகை கடை வாங்குபவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொள்கையை தளர்த்துமாறு மத்திய நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படக்கூடிய மத்திய நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கியின் நகை கடன் கொள்கையை ஆய்வு செய்து சிறு தங்க கடன் வாங்குபவர்களின் தேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சில தளர்வுகளை கொண்டு வரலாம் என பரிந்துரை செய்திருக்கிறது.

மேலும் புதிய விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்துவது கடினம் என்பதால் அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்திருக்கும் மத்திய நிதி அமைச்சகம் இந்த வழிகாட்டுதல்களை 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. சிறு தொகையை கடனாக வாங்குபவர்களுக்கு இந்த விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கலாம் என பரிந்துரை செய்துள்ள மத்திய நிதி அமைச்சகம் 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக கடன் வாங்குபவர்களுக்கு விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கலாம் என கூறியுள்ளது.

இதன் மூலம் அவர்களுக்கு விரைவாக கடன் கிடைக்கும் என தெரிவித்திருக்கிறது. ரிசர்வ் வங்கி மத்திய அரசின் இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நிதி அமைச்சகம், பொதுமக்கள் உள்ளிட்ட இதில் சம்பந்தப்பட்ட அனைவரின் கருத்துக்களையும் பரிசீலனை செய்து தங்க நகை கடன் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வரும் என நம்புவதாக தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+