தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தவும், இளைஞர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் மாநில அரசு முன்னெடுத்து வரும் முக்கிய திட்டங்களில் ஒன்றான சிப்காட் தொழிற்பூங்கா திட்டம் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி தாண்டி பெரிய உற்பத்தி தளமாக மாறியிருப்பது ஓசூர்.
ஆனால் ஓசூர் பெரும் உற்பத்தி நகரமாக மாறி வரும் வேளையில் அனைத்து நிறுவனங்களுக்கும் போதுமான, சரியான இடம் கிடைக்கப்பது இல்லை. இதனால் தமிழ்நாடு அரசு ஓசூர்-ஐ விரும்பி வரும் முதலீட்டாளர்களுக்கு மாற்று இடமாகவும், ஓசூர்-ல் கிடைக்கும் அனைத்து வசதிகளும், வாய்ப்புகளும் கொண்ட தர்மபுரியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

தர்மபுரியில் சிப்காட் அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் தற்போது செயல்பாட்டுக்கு வரவுள்ளது என்பது தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான மைல்கல்லாகும். தர்மபுரி சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அனுமதி கிடைத்துள்ளதால், தர்மபுரி சிப்காட் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் மூலம் ஏற்கனவே பெரும் தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், தர்மபுரி சிப்காட் திட்டம் இந்த மாவட்டத்தின் பொருளாதாரத்தை உயர்த்தி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் ஏற்கனவே எலக்ட்ரிக் வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் அமைந்துள்ள நிலையில், தர்மபுரி சிப்காட் இந்தத் துறையின் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தர்மபுரி சிப்காட் சுமார் 1733 ஏக்கர் பரப்பளவில் அமையும் திட்டத்தில் தமிழ்நாடு அரசு சுமார் 462 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. மேலும், இந்த தொழிற்பூங்காவில் சுமார் 20000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தர்மபுரி சிப்காட் திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி செயல்படுத்தப்பட உள்ளது. இதில் சிவப்பு பிரிவில் இருக்கும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எலக்ட்ரிக் வாகன நிறுவனமான ஓலா எலக்ட்ரிக், தர்மபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த எலக்ட்ரிக் வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க 500 ஏக்கர் ஒதுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, இந்தியாவின் எலக்ட்ரிக் வாகனத் துறை வளர்ச்சிக்கும் ஒரு முக்கிய பங்களிப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தர்மபுரி சிப்காட் திட்டம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
More From GoodReturns

இப்பவே இது நடக்கும்னு எதிர்பாக்கல.. இந்திய ஐடி நிறுவனங்களை மொத்தமாக விழுங்கிய Anthropic..!!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications