விற்பனைக்கு வரும் RCB அணி..? டயாஜியோ எடுத்த முடிவால் விராட் கோலி ஷாக்..!!

இந்தியா முழுவதும் 2 மாதம் கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல்-ஐ கொண்டாடி தீர்த்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2025-ஆம் ஆண்டு முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த அணியின் மிகப்பெரிய நட்சத்திரமான விராட் கோலி, உலகளவில் விளையாட்டு வீரர்களில் மிகப்பெரிய சோஷியல் ஸ்டார் ஆக உள்ளார். RCB அணியின் வெற்றியை கொண்டாடிய மக்களில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் இந்த வெற்றி, ஆர்சிபி அணியின் பிராண்ட் மதிப்பையும், சந்தை மதிப்பையும் உயர்த்தியுள்ளது.

முதல் வெற்றி, பிராண்ட் மதிப்பு உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு RCB அணியின் உரிமையாளரான பிரிட்டிஷ் மதுபான நிறுவனமான டயாஜியோ பிஎல்சி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ஐபிஎல் உரிமையை விற்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விற்பனைக்கு வரும் RCB அணி..? டயாஜியோ எடுத்த முடிவால் விராட் கோலி ஷாக்..!!

டயாஜியோ நிர்வாகம் இது குறித்து ஆலோசகர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாக ஈடி பத்திரிக்கை தெரிவித்துள்ளது. டயாஜியோ நிர்வாகம், தனது இந்தியப் பிரிவான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (யுஎஸ்எல்) மூலம் ஆர்சிபியை நிர்வாகம் செய்து வருகிறது.

RCB மதிப்பு எவ்வளவு தெரியுமா?: டயாஜியோ நிர்வாகம் ஆர்சிபி அணியின் முழு அல்லது பகுதி உரிமையை விற்க திட்டமிடுவதாகவும், இதற்கு ஆர்சிபி அணியை 2 பில்லியன் டாலர் வரையில் மதிப்பீட்டை எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை, மேலும் அணியை விற்காமல் வைத்திருக்கவும் வாய்ப்புள்ளது.

டயாஜியோவின் செய்திதொடர்பாளர் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார், மற்றும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் பிரதிநிதியும் எவ்விதமான பதிலும் அளிக்கவில்லை. டயாஜியோ நிர்வாகம் ஆர்சிபி அணியில் முதல் வெற்றியை பணமாக்க முடிவு செய்துள்ளது, 18 வருடத்திற்கு பின்பு வெற்றி பெற்றுள்ள ஆர்சிபி அணி மீண்டும் வெற்றி பெருமா என்பது பெரும் கேள்வி தான். இந்த நிலையில் தான் ஆர்சிபி அணியின் உரிமையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விற்க முடிவு செய்துள்ளது டயாஜியோ. வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பின்பு இப்படியொரு முடிவு எடுக்க மற்றொகு முக்கியமான காரணமும் உள்ளது.

மதுபான விளம்பரங்கள் தடை: இந்தியாவில் மது மற்றும் புகையிலை பொருட்களின் நேரடி விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், டயாஜியோ போன்ற நிறுவனங்கள், சோடா போன்ற பிற பொருட்களை முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மூலம் விளம்பரப்படுத்தி வருகின்றன.

இதேவேளையில் இந்திய சுகாதார அமைச்சகம் ஐபிஎல்-இல் மது மற்றும் புகையிலை பிராண்டுகளின் விளம்பரங்களை, மறைமுக விளம்பரங்கள் உட்பட, தடை செய்ய வலியுறுத்தி வருகிறது. இந்த ஒழுங்குமுறை அழுத்தங்கள் தான், டயாஜியோவின் ஆர்சிபி பங்கு விற்பனை முடிவுக்கு முக்கியமான காரணமாக இருக்ககூடும்.

ஐபிஎல் மதிப்பு மற்றும் வர்த்தகம்: ஐபிஎல் அணிகளின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருவதால், ஐபிஎல் அணி உரிமைகள் விளையாட்டுத் துறையில் மிகவும் விருப்பப்படும் சொத்துகளாக மாறியுள்ளன. ஆர்சிபி விற்பனை நடந்தால், இது உலகின் வேகமாக வளர்ந்து வரும் ஸ்போர்ட்ஸ் லீக் போட்டியில் ஒன்றான ஐபிஎல்-இல் எதிர்கால ஒப்பந்தங்களுக்கு ஒரு அளவுகோலாக அமையும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+