இந்தியாவில் மதுபான விற்பனையை ஆன்லைன் தளத்திற்குக் கொண்டு வரவும், வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக உற்பத்தி நிறுவனமே விற்பனை செய்யும் மிக முக்கியமான திட்டத்தில் பிரிட்டன் மதுபான விற்பனை நிறுவனமான டியாஜியோ இறங்கியது.
இத்திட்டத்தைச் செயல்படுத்தச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹிப்பார் (HipBar) என்னும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது.
ஆனால் இந்தியாவில் ஆன்லைன் மதுபான விற்பனைக்கு மாநில அரசுகளும், மத்திய அரசும் வாய்ப்பு அளிக்காத நிலையில், இத்திட்டத்தில் இருந்தும், ஹிப்பார் உடனான ஒப்பந்தத்தில் இருந்தும் விலக முடிவு செய்துள்ளது டியாஜியோ.
ஆன்லைன் மதுபான விற்பனை
இந்தியாவில் ஆன்லைன் மதுபான விற்பனை திட்டத்தைச் செயல்படுத்தப் பிரிட்டன் டியாஜியோ நிறுவனம் தனது நிர்வாகத்தின் கீழ் இருக்கும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வாயிலாக ஹிப்பார் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை 27 கோடி ரூபாய்க்கு 2018ல் கைப்பற்றியது.
அரசு அனுமதி மறுப்பு
ஆனால் ஆன்லைன் மதுபான விற்பனைக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபட்ட விதிமுறைகள், கட்டுப்பாடுகள், தடைகள் விதித்து வரும் காரணத்தாலும், மத்திய அரசும் இதற்கான வரைமுறை உருவாக்க விருப்பம் இல்லாமல் இருக்கும் காரணத்தால் இத்திட்டத்தில் இருந்து முழுமையாக வெளியேற டியாஜியோ முடிவு செய்துள்ளது.
டியாஜியோ முதலீடு
2018ல் டியாஜியோ கைப்பற்றிய 26 சதவீத பங்குகளைத் தற்போது ஹிப்பார் நிறுவனத்தின் நிறுவனர் ஆன பிரசன்னா நட்ராஜன்-க்கு 98 சதவீத நஷ்டத்துடன் வெறும் 52 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது டியாஜியோ.
டியாஜியோ - ஹிப்பார் கூட்டணி
ஆன்லைன் மதுபான விற்பனைக்கு மத்திய மாநில அரசுகள் மட்டும் அல்லாமல் உள்ளூர் மதுபான கடைகளும் விருப்பம் இல்லாமலும், எதிர்ப்பு தெரிவித்து வரும் காரணத்தால் அடுத்தகட்டத்திற்குச் செல்ல முடியாமல் டியாஜியோ - ஹிப்பார் கூட்டணி முடங்கியுள்ளது.
2020 லாக்டவுன்
2020 லாக்டவுன் காலத்தில் சில மாநிலங்களில் மட்டும் ஆன்லைன் மதுபான ஆர்டர் மற்றும் டெலிவரி சேவைக்கு அனுமதி அளித்தது. இக்காலகட்டத்தில் நாட்டின் அனைத்து துறைகளிலும் ஈகாமர்ஸ் வர்த்தகம் கணிசமான வளர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
27 பில்லியன் டாலர் சந்தை
இந்திய மதுபான சந்தையின் மொத்த மதிப்பு 27 பில்லியன் டாலர், ஒவ்வொரு ஆண்டும் இதன் அளவு குறைந்தபட்சம் 5 முதல் 10 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனாலேயே அமேசான், பிளிப்கார்ட், ஸ்விக்கி, டிப்லூர் ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் மதுபான விற்பனை துறையில் இறங்கியுள்ளது.
பிரசன்னா நட்ராஜன்
ஆன்லைன் மதுபான விற்பனையில் முதன் முதலீல் இறங்கியது பிரசன்னா நட்ராஜன் தலைமையிலான ஹிப்பார் என்பதால் பல கடுமையான தடைகளை அரசு தரப்பில் எதிர்கொண்டது. ஆனாலும் ஹிப்பார் நிறுவனம் தனது வர்த்தகத்தை வெற்றிகரமான மேற்கு வங்காளம் மற்றும் ஒடிஷா ஆகிய மாநிலங்களில் விரிவாக்கம் செய்துள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications