அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் எச்சரிக்கை விடுத்ததலை போலவே வர்த்தக போரை தொடங்கிவிட்டார். சீனா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான இறக்குமதியை வரியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க நலன்களை சீர்குலைக்கும் வகையில் இந்த நாடுகளின் செயல்பாடுகளும் வர்த்தக நடவடிக்கைகளும் இருப்பதாக தொடர்ந்து கூறி குற்றம்சாட்டி வருபவர் டிரம்ப். இந்நிலையில் தான் மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரியும் ,சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரியும் விதித்துள்ளார்.

நல்வாய்ப்பாக டிரம்ப் இந்த உத்தரவில் இந்தியா குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. முன்னதாக சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய மூன்று நாடுகள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரியை விதிக்கின்றன, அதை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா ,இந்தியா, ஈரான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளை கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பில் இருக்கும் நாடுகள் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு பதிலாக தங்களின் சொந்த நாட்டு கரன்சிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளன, இந்த நிலை நீடித்தால் இந்த கூட்டமைப்பில் இருக்கும் அனைத்து நாடுகளின் பொருட்கள் மீதும் 100% இறக்குமதி வரியை விதிப்பேன் என எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்க பொருளாதாரத்திற்கும் அமெரிக்க மக்களின் நலனுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் தன்னுடைய நிர்வாகம் கடுமையான வர்த்தக நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்ளும் என டிரம்ப் கூறியிருந்தார். தன்னுடைய முதல் கட்ட வர்த்தக போரை சீனா , மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் மீது தொடுத்துள்ளார்.
ஆனால் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பின்னால், ஃபென்டனையில் எனப்படும் போதை மருந்து முக்கிய காரணம். சீனாவில் இதற்கான ரசாயனங்கள் தயாரிக்கப்பட்டு மெக்சிகோ வழியே கனடாவந்து அங்கே போதை மருந்தாக மாறி அமெரிக்காவிற்கு கடத்தப்படுகிறதாம். இதற்கு எதிராகவே இப்படி ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது டிரம்ப் நிர்வாகம்.
தற்போதைக்கு இந்தியா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு மத்திய அரசு டிரம்ப் நிர்வாகத்துடன் இணக்கத்துடன் செயல்பட முன் வந்திருப்பது ஒரு காரணமாக கூறலாம். டிரம்ப் தன்னுடைய முதல் பதவி காலத்தில் சீனா மீது மேற்கொண்ட வர்த்தக நடவடிக்கைகள் இந்தியாவின் வர்த்தக போக்கையே மாற்றி அமைத்தன என நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பிவிஆர் சுப்ரமணியம் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
எனவே டிரம்ப் நிர்வாகம் எடுக்கும் வர்த்தக ரீதியான நடவடிக்கைகள் சர்வதேச அளவில் வர்த்தகப் போக்கையே மாற்றி அமைக்கும், அந்த வாய்ப்பை இந்தியா சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற பார்வையும் முன் வைக்கப்படுகிறது. அதே சமயம் டிரம்ப் இந்தியாவின் வர்த்தக நடவடிக்கைகளையும் வரி நடைமுறைகளையும் தொடர்ந்து சாடி வருகிறார். அவர் என்ன செய்வார் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பதால் இந்தியா சற்று எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!



Click it and Unblock the Notifications