உருளைக்கிழங்கு என்பது இந்தியர்களின் விருப்பத்திற்குரிய உணவாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் உருளைக்கிழங்கு இந்தியர்களின் விருப்பத்திற்குரிய உணவாக மட்டுமின்றி இந்தியர்களின் முக்கிய ஏற்றுமதி பொருளாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக உருளைக்கிழங்கு சிப்ஸ் குஜராத்திலிருந்து மிக அதிகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதும் அதற்கு முக்கிய காரணம் இன்றைய பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருக்கும்போது செய்த கட்டமைப்புதான் என்பது குறிப்பிடதக்கது.
உருளைக்கிழங்கு சிப்ஸ்
உருளைக்கிழங்கு என்பது கடந்த பல ஆண்டுகளாக இந்தியர்களின் வழக்கமான உணவுப்பொருட்களில் ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக உருளைக்கிழங்கு சிப்ஸ் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக உள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு 6 ஆயிரம் மெட்ரிக் டன் உருளைக்கிழங்கு சிப்ஸ்களை இறக்குமதி செய்த இந்தியா, 2019 ஆம் ஆண்டில் சுமார் 30,000 டன் உருளைக்கிழங்கு சிப்ஸ்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்து உள்ளது
குஜராத்
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ் பெரும்பாலும் குஜராத் மாநிலத்தில் இருந்து ஏற்றுமதி ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மொத்த உருளைக்கிழங்கு உற்பத்தியில் குஜராத் 7.72% மட்டுமே அறுவடை செய்கிறது. ஆனால் ஏற்றுமதியில் இந்த மாநிலம் எப்படி இந்த அளவுக்கு உயர்ந்தது என்பதற்கு ஒரே காரணம் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது செய்த சாதனை தான் என்று கூறப்படுகிறது
நரேந்திர மோடி
குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது மூன்று பெரிய உருளைக்கிழங்கு உணவு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்தார். மெக்கெய்ன் ஃபுட்ஸ், இஸ்கான் பாலாஜி ஃபுட்ஸ் மற்றும் ஹைஃபன் ஃபுட்ஸ் ஆகிய இந்த மூன்று உணவு தொழிற்சாலை தான் இன்றைய உருளைக்கிழங்கு ஏற்றுமதியில் சாதனை செய்து வருகிறது.
ஏற்றுமதி
இதுகுறித்து ஹைபன் ஃபுட்ஸ் சி.இ.ஓ ஹரேஷ் கரம்சந்தனி அவர்கள் கூறியபோது, 'இந்தியா 2015ஆம் ஆண்டில் பிரஞ்ச் ஃபிரை என்று கூறப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. ஆண்டுக்கு 5,000 மெட்ரிக் டன் உருளைக்கிழங்கு ஏற்றுமதி செய்யும் திறனை மெக்கெய்ன் ஃபுட்ஸ், இஸ்கான் பாலாஜி ஃபுட்ஸ் மற்றும் ஹைஃபன் ஃபுட்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் பெற்றுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து உறைந்த உருளைக்கிழங்கு தயாரிப்பு ஏற்றுமதியில் குஜராத் முக்கிய பங்கு வகிக்கின்றது' என்று கூறியுள்ளார்.
$1.10 பில்லியன் சந்தை மதிப்பு
இந்தியாவின் உறைந்த நிலையிலான உருளைக்கிழங்கு தயாரிப்புகள் 2020 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட $1.10 பில்லியன் சந்தை மதிப்பை எட்டியதாகவும், இந்த சந்தையானது 2022-27 ஆம் ஆண்டிற்குள் 17 சதவிகிதம் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications