ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பின்பு இந்தியாவில் அதிகளவில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு இதைச் சுத்திகரிப்பு செய்து பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மே மாதத்துடன் ஒப்பிடும்போது, ஜூன் மாதத்தில் ஐரோப்பாவிற்கு இந்தியாவின் டீசல் ஏற்றுமதி மட்டும் வியப்பு அளிக்கும் வகையில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் சிறந்த லாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிகிறது.

எனர்ஜி கார்கோ டிராக்கர் அமைப்பான வோர்டெக்ஸா (Vortexa) வெளியிட்டுள்ள தகவல் படி, இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் ஜூன் மாதத்தில் ஐரோப்பாவிற்கு ஒரு நாளைக்கு 119,400 பேரல் டீசலை ஏற்றுமதி செய்துள்ளன. இது மே மாதத்தில் ஒரு நாளைக்கு 24,500 பேரல் டீசல் ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது 4 மடங்கு அதிகமாகும்.
இதேவேளையில் இந்தியாவின் மொத்த டீசல் ஏற்றுமதி 4% குறைந்து ஒரு நாளைக்கு 482,400 பேரல்களாகக் குறைந்துள்ளது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட டீசலின் மொத்த ஏற்றுமதியில் 25 சதவீதம் ஐரோப்பாவிற்கு மட்டும் ஜூன் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இதேவேளையில் ஆசியாவிற்கான ஏற்றுமதி 10% குறைந்து ஒரு நாளைக்கு 107,800 பேரல்களாகவும், ஆபிரிக்கா உட்பட பிற சந்தைகளுக்கான ஏற்றுமதி 30% குறைந்துள்ளது.
ஐரோப்பாவிற்கு டீசல் ஏற்றுமதி செய்வது மூலம் கூடுதல் லாபம் கிடைக்கும் காரணத்தாலும், திடீர் டிமாண்ட் உருவான காரணத்தாலும் இந்தியாவில் இருந்து அதிகப்படியான டீசல் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது, இதேவேளையில் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது லாப அளவுகள் குறைவு என்பதால் குறைக்கப்பட்டு இருக்கலாம் என வோர்டெக்ஸா அமைப்பின் ஆய்வாளர் செரீனா ஹூவாங் (Serena Huang) கூறியுள்ளார்.
இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் முக்கியமாக டீசல், பெட்ரோல் மற்றும் ஜெட் எரிபொருட்களை உருவாக்கி கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. உலக நாடுகளில் இருக்கும் தேவை மற்றும் விலை அளவுகள் இந்திய எரிபொருள் ஏற்றுமதிக்கான இடத்தை தீர்மானிக்கிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரஷ்யாவின் ரோஸ்நெஃப்ட் கட்டுப்பாட்டில் இயங்கும் நயாரா எனர்ஜி ஆகியவை டீசல் ஏற்றுமதியில் மிகப்பெரிய இரண்டு நிறுவனங்கள் ஆகும்.
2022-23 நிதியாண்டில் இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் டீசல் ஏற்றுமதியில் இருந்து சுமார் 29 பில்லியன் டாலர் மதிப்பிலான வருவாய் ஈட்டின. 2024 ஆம் நிதியாண்டில் சந்தையில் எரிபொருளுக்கான டிமாண்ட் பெரிய அளவில் குறைந்திருக்கும் காரணத்தால் இந்த நிதியாண்டில் 22 பில்லியன் டாலர் அளவிலான வருவாய் பெற்றது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?



Click it and Unblock the Notifications