டெல்லி: கூடிய விரைவில் எலான் மஸ்க்குக்கு சொந்தமான ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சேட்டிலைட் இணைய சேவைகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. ஸ்டார்லிங்க் சேட்டிலைட் நிறுவனம் தங்களுடைய செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில் வழங்குவதற்காக மத்திய அரசிடம் விண்ணப்பம் செய்துள்ளது. அரசு இதற்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் இந்தியாவில் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவைகளை பயன்படுத்துவது சாத்தியமாகும். இந்த சேவை இந்தியாவில் செயல்பாட்டுக்கு வந்தால் தடையற்ற இணையவசதியை அனைவரும் பெறலாம்.
இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், ஏர்டெல் நிறுவனமும் ஜியோ ஏர் பைபர் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஏர் பைபர் ஆகியவை மூலமாக வயர்லெஸ் பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவைகளை வழங்குகின்றன. 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் வயர்லெஸ் பிராட்பேண்ட் பயனாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியவை வழங்கக்கூடிய வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவைக்கும் ஸ்டார்லிங்க் நிறுவனம் வழங்கும் சேட்டிலைட் இன்டர்நெட் சேவைக்கும் என்ன வித்தியாசம் என்பதை நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வயர்லெஸ் பைபர் பிராட்பேண்ட் தேவைகளை வழங்குகிறது. இதற்காக இந்த நிறுவனம் சிறிய ஆன்டனாவை ஆங்காங்கே பொருத்துகிறது. அதிலிருந்து ஏர் பைபர் பாக்ஸில் இருக்கும் ரவுட்டருக்கு இன்டர்நெட் இணைப்பு கிடைக்கிறது. இந்த ஜியோ ஏர் பைபர் ஆன்டனாக்கள் அருகில் இருக்கும் மொபைல் டவரில் இருந்து 5ஜி சிக்னல்களைப் பெற்று அதனை வைஃபை ரவுட்டர்கள் வழியாக வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு வழங்குகிறது.
ஏர்டெல் நிறுவனமும் வயர்லெஸ் பிராட்பேண்ட் இணைப்பு மூலமாக இதே போன்ற ஒரு சேவை வழங்குகிறது. அதாவது 5ஜி மொபைல் டவர்கள் மூலம் சிக்னல்கள் பெறப்பட்டு ஆன்டனாக்கள் மூலம் அவை ரவுட்டர்களுக்கு கிடைக்கின்றன.
ஸ்டார்லிங்க் நிறுவனத்தை பொருத்தவரை நேரடியாக சேட்டிலைட்டில் இருந்து ஆன்டனாவிற்கு சிக்னல்கள் வழங்கப்படுகின்றன.
அதாவது இந்த சேவையை பெற பெரும் வாடிக்கையாளரின் வீட்டில் ஒரு ஆன்டனா பொருத்தப்பட்டு இருக்கும். இணைய சேவையானது நேரடியாக செயற்கைக்கோளிலிருந்து ஆன்டனாவிற்கு சிக்னலை பெற்று வழங்கும். இதற்கு நிலத்தில் எந்த ஒரு பேஸ் ஸ்டேஷன்களும் அமைக்கப்பட வேண்டியதில்லை.
ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் செயற்கைக்கோள்கள் பூமி சுற்றுப் பாதையில் சுற்றி வருகின்றன, அவற்றிலிருந்து இந்த ஆன்டனாக்கள் சிக்னல்களை பெற்று வாடிக்கையாளர்களுக்கு இன்டர்நெட் கனெக்டிவிட்டியை வழங்கும். எனவே இணைய சேவை எந்த ஒரு இடையூறும் இன்றி கிடைக்கும்.
புயல், மழை காலங்களில் கூட இந்த இணைய சேவையில் எந்த பாதிப்பும் இருக்காது. அவசர கால நிலையில் கூட இவை செயல்படும் என்பதால் ஸ்டார்லிங்க் சேட்டிலைட் இணைய சேவை இந்தியாவிற்கு பயன்பாட்டுக்கு வந்தால் பெரும்பாலானவர்கள் அதற்கு மாறி விடுவார்கள் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

இப்பவே இது நடக்கும்னு எதிர்பாக்கல.. இந்திய ஐடி நிறுவனங்களை மொத்தமாக விழுங்கிய Anthropic..!!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications